Monday, December 21, 2015

மீனம் ஆண்டு பலன் - 2016,

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்


மீனம்  ஆண்டு பலன்  -  2016,

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)



கம்பீரமான தோற்றமும் பிறரை வசீகரிக்கக்கூடிய அழகும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வதும் 08-01-2016 முதல் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகப்பலனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கிருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். 02-08-2016 வரை  உங்கள் ராசியாதிபதி குரு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைப் பளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். 

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றலுண்டாகும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றி னாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் பிரச்சினை, பொருளாதாரத் தடைகள் என ஆண்டின் தொடக்கத்தில் அவதிப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நினைத்தது நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சி யளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தொடரும். சேமிப்பு பெருகும்.

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைப்பளு போன்றவைகளால் ஆண்டின் தொடக்கத்தில் பல சங்கடங்களை சந்தித்தாலும், ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறா மைகள், தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் போன்ற யாவும் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியினை உண்டாக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கிப்போட்டு தொழிலை விரிவுசெய்வீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றால் லாபம் குவியும்.

கொடுக்கல்- வாங்கல்

உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சரளமான நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகள் பைசலாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி யளிக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினை இருக்காது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு விரயங்கள் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும் பொருளாதார உயர்வுகளையும் அடைவீர்கள். மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கட்சிப் பணிக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். மாண்புமிகு பதவிகள் தேடிவரக்கூடிய யோகம் உண்டாகும்.

கலைஞர்கள்

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆண்டின் தொடக்கத்தில் தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உங்கள் திறமைகளுக்கு தீனிபோடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் உயர்வுகளும் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். 

மாணவ- மாணவியர்

ஆண்டின் தொடக்கத்தில் கல்வி பயிலுபவர்கள் அனுகூலமற்ற பலன் களை சந்தித்தாலும் கல்வியில் சாதனை பல செய்வார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடமுடியும். நண்பர்களால் நற்பலன்கள் அமையும்.


மாதப்பலன்




ஜனவரி

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், அதிசாரமாக 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் எல்லாவகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகளும் தாராளமாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். செய்யும் தொழில், உத்தியோக நிலையில் முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். நெருங்கியவர் களின் ஆதரவுகள் சிலநேரங்களில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-01-2016 மதியம் 01.06 மணி முதல் 05-01-2016 இரவு 12.56  மணி  வரை மற்றும் 30-01-2016 இரவு 09.18 மணி முதல் 02-02-2016 காலை 09.40 மணி வரை. 

பிப்ரவரி 

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பயணங்களால் சாதகமான பலன்களை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்களனைத்தும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-02-2016 அதிகாலை 04.54 மணி முதல் 29-02-2016 மாலை 05.37 மணி வரை. 

மார்ச் 

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். 6-ல் ராகு இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம்: 25-03-2016 பகல் 11.37 மணி முதல் 27-03-2016 இரவு 12.22 மணி வரை.

ஏப்ரல் 

ஜென்ம ராசியில் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந் தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-04-2016 மாலை 05.46 மணி முதல் 24-04-2016 காலை 06.24 மணி வரை.

மே

ருண ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்பதால் ஓரளவுக்கு எதையும் சமாளித்துவிட முடியும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-05-2016 இரவு 11.58 மணி முதல் 21-05-2016 மதியம் 12.30 மணி வரை.

ஜூன் 

பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு முன்னேற் றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவி ருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 15-06-2016 காலை 06.47 மணி முதல் 17-06-2016 இரவு 07.18 மணி வரை.

ஜூலை 

ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றிமறையும். கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்கு காப்பாற்றிவிட முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்செலவுகள் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-07-2016 மதியம் 02.23 மணி முதல் 15-7-2016 அதிகாலை 02.56 மணி வரை.

ஆகஸ்ட் 

ஜென்ம ராசிக்கு 2-ஆம் தேதி முதல் 7-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங் களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று திருப்தியான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித் தாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-08-2016 இரவு 10.25 மணி முதல் 11-08-2016 மதியம் 11.01 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பது உத்தமம். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-09-2016 காலை 06.14 மணி முதல் 07-09-2016 மாலை 06.52 மணி வரை.

அக்டோபர் 

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 02-10-2016 மதியம் 01.19 மணி முதல் 05-10-2016 அதிகாலை 01.57 மணி வரை மற்றும் 29-10-2016 இரவு 07.35 மணி முதல் 01-11-2016 காலை 08.15 மணி வரை.

நவம்பர் 

மாதக்கோளான சூரியன் 8-ல் சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவை யற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைவ தால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 26-11-2016 அதிகாலை 01.33 மணி முதல் 28-11-2016 மதியம் 02.19 மணி வரை.

டிசம்பர் 

மாதக்கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம்செய்வதும் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.  மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட் டாரத் தொடர்புகள் விரிவடையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-12-2016 காலை 08.06 மணி முதல் 25-12-2016 இரவு 08.52 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         1, 2, 3, 9. 

கிழமை:     வியாழன், ஞாயிறு.

திசை:     வடகிழக்கு.

நிறம்:     மஞ்சள், சிவப்பு.

கல்:         புஷ்பராகம். 

தெய்வம்:     தட்சிணாமூர்த்தி.

No comments: