Saturday, December 12, 2015

மிதுனம் ஆண்டு பலன்கள் 2016





 காணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில் 

காலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை 
பஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய
 ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)

 " இந்த நாள் "

என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 



மிதுனம் ஆண்டு பலன்கள் 2016
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூகப் பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!  இந்த 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படியிருக்கும் என பார்க்கும்போது, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் ஓரளவுக்கு மிக சிறப்பாகவே இருக்கும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும்  சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் மேன்மைகளைப் பெறுவீர்கள். பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். 02-08-2016 முதல் குரு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று சொல்லமுடியாது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது,  குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன்களை அடையமுடியும். 

உடல் ஆரோக்கியம் 
உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்துமுடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்துவிட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை
பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்து வகையில் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது தாமதப்பட்டாலும் மனநிம்மதி குறையாது. எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். அபிவிருத்தியும் பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்களே உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதைத் தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

அரசியல்
அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிரணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.

கலைஞர்கள்
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்துசேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப்பெற சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பட்டபாட்டிற்கான பலனை தடையின்றிப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப்பெறும். அசையா சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிமேல் வெற்றியினைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
மாதப்பலன்

ஜனவரி
உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் 3-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பாகும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.  சிவபருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 10-01-2016 மதியம் 03.32 மணி முதல் 12-01-2016 மாலை 07.17 மணி வரை

பிப்ரவரி 
ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், உத்தியோகரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபங்கள் அமையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மாணவர்களும் நற்பலனை அடைவார்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 07-02-2016 அதிகாலை 01.12 மணி முதல் 09-02-2016 காலை 04.11 மணி வரை.

மார்ச்
ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்துக் காத்திருந்த சுபசெய்தி ஒன்று கிடைக்கப்பெற்று மனநிறைவு தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். லாபங்கள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.
சந்திராஷ்டமம்: 05-03-2016 மதியம் 11.25 மணி முதல் 07-03-2016 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல் 
மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 6-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார நிலை மேம்படுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு புது வீடு குடிபுகும் யோகம், சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 01-04.-2016 இரவு 08.22 மணி முதல் 04-04-2016 அதிகாலை 01.14 மணி வரை மற்றும் 29-04-2016 அதிகாலை 03.16 மணி முதல் 01-05-2016 காலை 09.41 மணி வரை.

மே 
ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமான நிலையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளைப் பெறமுடியும். விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.
சந்திராஷ்டமம்: 26-05-2016 காலை 08.52 மணி முதல் 28-05-2016 மாலை 04.00 மணி வரை.

ஜூன்
சூரியன் 12-ல் சஞ்சரித்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் பலப்படும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுய முயற்சிகளில் வெற்றியுண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 22-06-2016 மதியம் 02.42 மணி முதல் 24-06-2016 இரவு 09.24 மணி வரை.

ஜூலை
ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், உத்தியோகரீதியாக இருந்த பிரச்சினைகளனைத்தும் படிப்படியாகக் குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குரு சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் அமையும். கடன்கள் சற்று குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 19-07-2016 இரவு 09.53 மணி முதல் 22-07-2016 அதிகாலை 03.41 மணி வரை.

ஆகஸ்ட் 
ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாக்கும். இம்மாதம் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் குரு 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் சற்றே ஏற்றமான பலன்களைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகளனைத்தும் விலகி குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16-08-2016 காலை 06.38 மணி முதல் 18-08-2016 பகல்11.51 மணி வரை.

செப்டம்பர் 
முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மகிழ்ச்சி குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-09-2016 மாலை 04.06 மணி முதல் 14-09-2016 இரவு 09.42 மணி வரை.

அக்டோபர் 
சுகஸ்தானமான 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு இம்மாதம் தடைவிலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபங்கள் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறு மனக்கவலை ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 09-10-2016 இரவு 12.53 மணி முதல் 12-10-2016 காலை 07.50 மணி வரை.

நவம்பர்
உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சனியும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. முருகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 06-11-2016 காலை 08.00 மணி முதல் 08-11-2016 மாலை 04.32 மணி வரை.

டிசம்பர்
முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் நிம்மதிக் குறைவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார உயர்வுகளை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 03-12-2016 மதியம் 01.45 மணி முதல் 05-12-2016 இரவு 11.01 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8.
நிறம்: பச்சை, வெள்ளை.
கிழமை: புதன், வெள்ளி.
கல்: மரகதம்.
திசை: வடக்கு.
தெய்வம்: விஷ்ணு.

Contact


For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com


bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA.


No comments: