Thursday, December 24, 2015

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்


ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017  ரிஷபம்

ரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

எப்பொழுதும் மற்றவர்களுக்காக பாடுபடும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! வரும் 08.01.2016 முதல் 27.07.2017 வரை ராகு பகவான் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ஆம் வீட்டிலும், கேது பகவான் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. தற்போது 4ல் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 02.08.2016 முதல் பஞ்சம ஸ்தானமான 5ல் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். சனி 7ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது-. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், வேலையாட்களும் ஒற்றுமையுடன் செயல்படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும்.

உடல் ஆரோக்கியம்
தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிர் பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.
குடும்பம் பொருளாதாராநிலை
கணவன் மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும்.  பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது  பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரித்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்
பணியில் நிம்மதியான நிலையிருக்கும் எதிலும் திறம் பட செயல்படுவீர்கள்-. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும்.
அரசியல்
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
மாணவ மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.

இராகு உத்திர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை
இராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4ல் 4ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் ஜென்ம ராசிக்கு 10ல் அட்டம லாபாதிபதியான குருவின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் --குருவும் 4ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது பூரட்டாதி நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 14.07.2016 வரை
இராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும், கேது பகவான் அட்டமாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இக்காலங்களில் குரு பகவான் 4ல் சஞ்சரிப்பதாலும் சனி 7ல் சஞ்சரிப்பதாலும் கணவன்-&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நல்ல வரன்கள் தட்டிப் போகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும்.
இராகு பூர நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 15.07-.2016  முதல் 17.11.2016 வரை
இராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4லும் கேது பகவான் இராகுவின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 02.08.2016 முதல் குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை சரளமாக இருக்கும்.  தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வேலைபளு குறைவாக இருக்கும்.
இராகு மக நட்சத்திரத்தில், கேது சதயம் நட்சத்திரத்தில் 18.11.2016 முதல் 23.03.2017 வரை
இராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும், கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். ராகு கேதுவால் நன்மை தீமைக் கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு 5ல் சஞ்சரிப்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இராகு மகம் நட்சத்திரத்தில், கேது அவிட்டம் நட்சத்திரத்தில் 24.03.2017 முதல் 27.07.2016 வரை
ராகு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டிலும், கேது பகவான் 7,12க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை நிலவும். குரு 5ல் இருப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படுவதுடன் மருத்துவ செலவுகளையும் குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம்.

கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள்
தன் பேச்சாற்றலால் மற்றவரை கவரக் கூடிய ஆற்றல் கொண்ட கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் திடகாத்திரமான உடல் வாகைக் கொண்டிருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 4ஆம் வீட்டிலும், கேது 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. சனியும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். என்றாலும் வரும் 02.08.2016 முதல் குரு 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.
ரோகிணி
அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும் குணம் கொண்ட ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவான் என்பதால் இயற்கையிலேயே இறைவனின் அருள் நிறைந்திருக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 4ஆம் வீட்டிலும், கேது 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும் சனி 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுனுகூலமற்ற அமைப்பாகும். என்றாலும் குரு வரும் 02.08.2016 முதல் 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். 
மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்கள்
பொறுமையும் சந்தித்துச் செயல்படும் திறனும் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த உங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் நல்ல நிர்வாகத் திறன் உள்ளவராகத் திகழ்வீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் ராகு 4ஆம் வீட்டிலும், கேது 10ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதும் சனி 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. என்றாலும் வரும் 02.08.2016ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் குரு 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகும். கடன்கள் யாவும் குறையும். சிலர் நினைத்தவரையே கைபிடித்து மகிழ்வர். 

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்   5,6,8,
நிறம்   வெண்மை, நீலம்
கிழமை  வெள்ளி, சனி
கல்    வைரம்
திசை   தென்கிழக்கு
தெய்வம்  விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 4லும் கேது 10&லும் சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது. ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறிவருவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது.  கருப்பு எள், வண்ண மயமான போர்வை, வெள்ளை புள்ளிகள் உடைய பழுப்பு நிற பசு போன்றவற்றை  ஏழை மனிதனுக்கு தானம் தருவது நல்லது. சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.


For your consultation




Jothidamamani

Dr MuruguBalamurugan PhD Astrology.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

Bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

CBS CODE-01078


No comments: