Sunday, December 13, 2015

கன்னி -ஆண்டு பலன் - 2016



கன்னி -ஆண்டு பலன்  -  2016

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)


சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிய மைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி இந்த 2016-ஆம் ஆண்டில் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களுக்கு முன்னேற்றங்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். 08-01-2016 முதல் கேது பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பாராத உயர்வுகளையும்,  லாபங்களையும் பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 12-ஆம் வீட்டிலும் 02-08-2016 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பலமாக சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரணக் கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் பூரிப்பு, மகிழ்ச்சி உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களைத் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறமுடியும். எதிர்பாராத பயணங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி  செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளும் பைசலாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிவிட முடியும் என்பதால் அவர்களின் அமோக ஆதரவினைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சிப் பணிக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும். 

கலைஞர்கள்

சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்லநேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்கநேரிடும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய, நிறைய உழைக்க வேண்டியி ருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டுக்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. 

பெண்கள்

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் சிறப்பாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். பள்ளி, கல்லூரி வாயிலாக இன்பச் சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். புதிய நண்பர்களின்  நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும்.


மாதப்பலன்



ஜனவரி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் கேது 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய தைரியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். நெருங்கியவர் களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். 4-ல் சூரியன் இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். விஷ்ணுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-01-2016 அதிகாலை 01.12 மணி முதல் 19-01-2016 காலை 04.31 மணி வரை. 

பிப்ரவரி 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. 2-ல் செவ்வாய் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-02-2016 காலை 07.12 மணி முதல் 15-02-2016 காலை 09.53 மணி வரை. 

மார்ச் 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-03-2016 பகல் 03.41 மணி முதல் 13-03-2016 மாலை 04.39 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும்.  குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-04-2016 அதிகாலை 02.21 மணி முதல் 10-04-2016 அதிகாலை 01.55 மணி வரை.

மே

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சுக்கிரனும், 12-ல் குரு, ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண்பழிகளைச் சுமக்கநேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிவ வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-05-2016 பகல் 01.17 மணி முதல் 07-05-2016 மதியம் 12.41 மணி வரை.

ஜூன்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம், செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-06-2016 இரவு 10.37 மணி முதல் 03-06-2016 இரவு 11.02 மணி வரை மற்றும் 29-06-2016 காலை 05.38 மணி முதல் 01-07-2016 காலை 07.29 மணி வரை.

ஜூலை 

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பிரிந்த உறவினர்களும் வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளிலும் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள னைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக செயல் படுவார்கள். சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம். 

சந்திராஷ்டமம் 26-07-2016 பகல் 11.05 மணி முதல் 28-07-2016 மதியம் 01.47 மணி வரை.

ஆகஸ்ட் 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரி யங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுதல் நல்லது. சிவபெருமானை வழிபடுதல் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-08-2016 மாலை 04.57 மணி முதல் 24-08-2016 இரவு 07.10 மணி வரை.

செப்டம்பர் 

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் பல வழிகளில் தேடிவருவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-09-2016 இரவு 12.54 மணி முதல் 21-09-2016 அதிகாலை 01.38 மணி வரை.

அக்டோபர் 

ஜென்ம ராசியில் சூரியன், குருவும், 4-ல் செவ்வாயும் சஞ்சரித்தாலும், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேவை யற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். உற்றார்- உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். 

சந்திராஷ்டமம்: 16-10-2016 காலை 11.13 மணி முதல் 18-10-2016 காலை 10.35 மணி வரை.

நவம்பர் 

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும். அரசுவழியில் அனுகூலங்கள் உண்டாகும். சனிக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-11-2016 இரவு 10.29 மணி முதல் 14-11-2016 இரவு 09.39 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல், சனி, சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறுசிறு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் அடையவேண்டிய முன்னேற்றங்களை அடைந்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-12-2016 காலை 08.28 மணி முதல் 12-12-2016 காலை 08.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         4, 5, 6, 7, 8.

நிறம்:     பச்சை, நீலம்.   
கிழமை:     புதன், சனி.

கல்:         மரகதப் பச்சை.    

திசை:    வடக்கு.        

தெய்வம்:     ஸ்ரீவிஷ்ணு.

Contact



For your consultation


Please sent Rs 500 for 5 Questions( with in  India)  per person , 25 US DOLLAR  For NRI  in favour of MURUGU BALAMURUGAN  with your birth details (date of birth,time,place) to  e-mail  for  horoscope reading

please contact my postal address  

Jothidamamani
Dr MuruguBalamurugan M.A.astro. Ph.D in Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail  murugu.astro@gmail.com murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com


bank accounts details are

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Barado

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA.


No comments: