Monday, December 21, 2015

கும்பம் ஆண்டு பலன் - 2016,

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா கோபால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்



கும்பம்  ஆண்டு பலன்  -  2016, 

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)



பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்புகொண்ட கும்ப ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-08-2016 வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியான முன்னேற்றங்கள், எதிலும் லாபங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். 08-01-2016 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமெடுத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அனுகூலமான பலனைப் பெறலாம். சற்று சிந்தித்து கவனமுடன் நடந்துகொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. சனி ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழி லாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும்.  சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறுசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், முன்னேற்றத் திற்கு இடையூறுகளும் ஏற்படும்.

 உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலை சற்றே சோர்வடையும். எடுக்கும் காரியங்களில் தடையும் தாமத நிலையும் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும் என்றாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றமடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதி வரை குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதும் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

உத்தியோகம்

நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவேண்டிய காலமாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். உயரதிகாரி களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். நீங்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாமல் சமாளிக்கமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களையும் புதிய முயற்சிகளையும் சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவி லான முன்னேற்றங்கள் தடைகளுக்குப்பின் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்

ஆண்டின் முற்பாதிவரை எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகிகளாக மாறுவார்கள். பணவிரயங்கள் ஏற்படும். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிவிட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றிக் கிடைக்கும் என்றாலும்  கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையக்கூடும். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர்விளைச்சல்  சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத  ஆதரவுகள் கிடைக்கப்பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். 

பெண்கள்

குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். அசையா சொத்துக்கள் வகையில் சில செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நினைத்ததை சாதிக்க முடியுமென்றாலும் மனது அலைபாயக்கூடிய காலமென்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறமுடியும்.


மாதப்பலன்




ஜனவரி 

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடக்கும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நனவாகும். தொழில், உத்தியோகம் செய்பவர் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் லாபங்களைப் பெறமுடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2016 அதிகாலை 00.13 மணி முதல் 03-01-2016 மதியம் 01.06 மணி வரை மற்றும் 28-01-2016 காலை 08.37 மணி முதல் 30-01-2016 இரவு 09.18 மணி  வரை. 

பிப்ரவரி 

ஜீவன ஸ்தானமான 10-ல் சனியும் விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது தொழில், வியாபாரரீதியாக வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-02-2016 மதியம் 04.20 மணி முதல் 27-02-2016 அதிகாலை 04.54 மணி வரை. 

மார்ச்  

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும், 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப்பாகும்.  பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-03-2016 இரவு 10.59 மணி மணி முதல் 25-03-2016 பகல் 11.37 மணி வரை.

ஏப்ரல் 

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். எந்த எதிர்ப்பு களையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். குரு 7-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்து கெடுபிடிகள் விலகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 19-04-2016 அதிகாலை 04.56 மணி முதல் 21-04-2016 மாலை 05.46 மணி வரை.

மே 

மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 7-ல் குரு 18-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தி அடைவதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-05-2016 பகல் 11.06 மணி முதல் 18-05-2016 இரவு 11.58 மணி வரை.

ஜூன்

சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரனும் சமசப்தம ஸ்தானமான 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெறமுடியும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-06-2016 மாலை 06.13 மணி முதல் 15-06-2016 காலை 06.47 மணி வரை.

ஜூலை 

சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்களும் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது. 

சந்திராஷ்டமம்: 10-07-2016 அதிகாலை 02.23 மணி முதல் 12-07-2016 மதியம் 02.23 மணி வரை.

ஆகஸ்ட் 

மாத முற்பாதியில் 6-ல் சூரியனும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையானது ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடக்க பழகிக்கொண்டால் நற்பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 06-08-2016 காலை 10.54 மணி முதல் 08-08-2016 இரவு 10.25 மணி வரை.

செப்டம்பர் 

மாதக்கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் தடை, தாமதங்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-09-2016 மாலை 06.53 மணி முதல் 05-09-2016 காலை 06.14 மணி வரை.

அக்டோபர் 

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவடையும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது மூலம் வீண்விரயங்களை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும். செவ்வாய் 11-ல் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 30-09-2016 அதிகாலை 01.46 மணி முதல் 02-10-2016 மதியம் 01.19 மணி வரை மற்றும் 27-10-2016 காலை 07.38 மணி முதல் 29-10-2016 இரவு 07.35 மணி வரை.

நவம்பர் 

மாதக்கோளான சூரியன் 9-ல் சஞ்சரிப்பதும், விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பணவரவுகளிலும் பற்றாக்குறை ஏற்படும். எந்த காரியத்தை செய்வதென்றாலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-11-2016 மதியம் 01.31 மணி முதல் 26-11-2016 அதிகாலை 01.33 மணி வரை.

டிசம்பர்

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், மாதக்கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளில் தடையிருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-12-2016 இரவு 08.41 மணி முதல் 23-12-2016 காலை 08.06 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்:         5, 6, 8.

கிழமை:     வெள்ளி, சனி.    

திசை:     மேற்கு.

நிறம்:     வெள்ளை, நீலம்.

கல்:         நீலக்கல்.    

தெய்வம்:     ஐயப்பன்.

No comments: