Monday, December 21, 2015

மகரம் ஆண்டு பலன் - 2016,

முனைவர் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா மோகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருகையா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்
முனைவர் முருகுபாலமுருகன்




மகரம்  ஆண்டு பலன்  -  2016, 
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)


எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல்கொண்ட, மகர ராசி நேயர்களே. இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.  வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடையமுடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்வுகளை பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 08-01-2016 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இதுமட்டுமின்றி 02-08-2016 வரை பொன்னவனான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் ஆண்டின் தொடக்கத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம். 02-08-2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களும் தடைகள்விலகி கைகூடும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.  நெருங்கியவர்களின் ஆதரவுகளால் மனமகிழ்ச்சியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும். 

உடல் ஆரோக்கியம் 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணைக்கும் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களிடம் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை 

ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி லாப ஸ்தானத்திலிருப்பதாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. தடைப்பட்ட சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி களைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும்  இடமாற்றங்களையும் பெறமுடியும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுப்புடன் பதிலளிப்பது நல்லது. 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரிங்களில் சிந்தித்துச் செயல் பட்டால் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களை சற்று அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஆகஸ்ட் மாதம் முதல் நல்ல லாபமான நிலையினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும். 

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமையும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெறமுடியும். வரவேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசைபோன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடையமுடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பாக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும்.  சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடையமுடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.   


மாதப்பலன் 


ஜனவரி 

ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சுக்கிரனும் சனியும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 25-01-2016 இரவு 09.54 மணி முதல் 28-01-2016 காலை 08.37 மணி வரை. 

பிப்ரவரி 

ஜீவன ஸ்தானத்தில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும்.  கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்திகரமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இட மாற்றங்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் மேற்கொள்ளவும். 

சந்திராஷ்டமம்: 22-02-2016 காலை 05.27 மணி முதல் 24-02-2016 மதியம் 04.20  மணி வரை. 

மார்ச் 

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைவரின் ஆதரவையும் பெறமுடியும். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். வியாபாரத்தில் லாபகரமான நிலை நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-03-2016 பகல் 11.35 மணி முதல் 22-03-2016 இரவு 10.59 மணி மணி வரை.

ஏப்ரல் 

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் நிம்மதி ஏற்படும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-04-2016 மாலை 05.17 மணி முதல் 19-04-2016 அதிகாலை 04.56 மணி வரை.

மே

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது வீண் அலைச்சலை ஏற்படுத்துமென்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களாலும் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். லஷ்மி தேவியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 13-05-2016 இரவு 11.57 மணி முதல் 16-05-2016 பகல் 11.06 மணி வரை.

ஜூன் 

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதனால் கடந்த காலங் களிலிருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்ற மான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-06-2016 காலை 08.06 மணி முதல் 12-06-2016 மாலை 06.13 மணி வரை.

ஜூலை 

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதார உயர்வுகளும் அரசுவழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின்  வெற்றிகிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-07-2016 மாலை 05.12 மணி முதல் 10-07-2016 அதிகாலை 02.23 மணி வரை.

ஆகஸ்ட் 

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 2-ஆம் தேதி முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-08-2016 அதிகாலை 02.07 மணி முதல் 06-08-2016 காலை 10.54 மணி வரை.

செப்டம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும்.  எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 31-08-2016 காலை 09.49 மணி முதல் 02-09-2016 மாலை 06.53  மணி வரை. மற்றும் 27-09-2016 மாலை 16.00 மணி முதல் 30-09-2016 அதிகாலை 01.46 மணி வரை.

அக்டோபர் 

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும், குருவும், 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கையம்மன், விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-10-2016 இரவு 09.32 மணி முதல் 27-10-2016 காலை 07.38  மணி வரை.

நவம்பர் 

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-11-2016 காலை 04.02 மணி முதல் 23-11-2016 மதியம் 01.31  மணி வரை.

டிசம்பர்

குரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகள் நிலவினாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-12-2016 மதியம் 12.41 மணி முதல் 20-12-2016 இரவு 08.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7.        

கிழமை: சனி, புதன்.        

திசை: மேற்கு.

நிறம்: நீலம், பச்சை.

கல்: நீலக்கல்,

No comments: