Wednesday, August 5, 2020

வார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை 2020

வார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை 2020 

ஆடி 25 முதல் 31 வரை

----------

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ் சந்தி

 

 

சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

09.08.2020

சூரிய புதன்

 சனி (வ)

 

குரு (வ) கேது

 

 

 

 

கிரக மாற்றம் இல்லை

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மீனம்             07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

மேஷம்          09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

ரிஷபம்          12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

மிதுனம்         14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

09.08.2020 ஆடி 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

 

10.08.2020 ஆடி 26 ஆம் தேதி திங்கட்கிழமை சப்தமி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை

 

14.08.2020 ஆடி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி மிருகசிரீஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராகு 3-ல், குரு 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எந்த சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்-- மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     10, 11, 15.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு அமையும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். புத்திர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபட்டு வந்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     9, 12, 13, 14.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பண வரவானது சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     9, 10, 11, 15.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாகும். கணவன்-- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்ககூடும் என்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு செய்ய நேரிடும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக்கூடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் கேது 6--ல் இருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணவிஷயத்தில் மட்டும் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடாமல் தம் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். சிவ பெருமானையும் சனி பகவானையும் வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     10, 11, 12, 13, 14.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று சாதகமான பலனை அடைவீர்கள். கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். ஆடிக்கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -     12, 13, 14, 15.

சந்திராஷ்டமம் - 07-08-2020 காலை 06.58 மணி முதல் 09-08-2020 இரவு 07.05 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளிதொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். தாராள தனவரவு உண்டாகி பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்---- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை மட்டும் ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். ஆடிக்கிருத்திகை நாளில் முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     9, 15.

சந்திராஷ்டமம் - 09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வலமான பலன்களை பெறுவீர்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்-- வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     9, 10, 11.

சந்திராஷ்டமம் -12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு குரு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி, 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம், தொழில் ரீதியாக மேன்மை ஏற்படும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்லது பல நடக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்-- மனைவி அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். வீடு மற்றும் வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பாலும் அபிவிருத்தி பெருகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். ஆடிக்கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் உள்ளம் மகிழும் இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.

வெற்றி தரும் நாட்கள் -     10, 11, 12, 13, 14.

சந்திராஷ்டமம் - 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு, 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாகும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் -     12, 13, 14, 15.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.  

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் இருக்கும் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     9, 15.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பு என்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். செவ்வாய் 2-ல் இருப்பதால் கணவன்-- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் விலகி ஏற்றங்கள் உண்டாகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆடிகிருத்திகை நாளில் முருக வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     10, 11.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள இடர்பாடுகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. செய்யும் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் உங்கள் ராசிக்கு குரு சாதகமற்று இருப்பதால் எதிலும் அகல கால் வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்-- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடனிருப்பவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     9, 12, 13, 14.


No comments: