மிதுனம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
மிதுனம் மிருகசீரிஷம்
3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி
நேயர்களே, இது நாள் வரை ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது என சஞ்சரித்த சர்ப கிரகங்கள்
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி
01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும்
சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் நிலவிய கடந்த கால கருத்து வேறுப்பாடுகள்
படிபடியாக குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும்
கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள
மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள்
அமையும்.
குரு வரும் 20-11-2020 வரை சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும் அடுத்து
பாக்கிய ஸ்தானமான 9-ல் அதிசாரமாக (கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021
வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள்
சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள்
தேடி வரும். சுப காரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலருக்கு
அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள்
பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியும்
பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும்
கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து
மகிழ்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை
ஏற்படுத்தும்.
ஒரு ராசியில் நீண்ட நாள் சஞ்சரிக்கும் கிரகமான சனி திருக்கணிதப்படி
உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமசனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில்
சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது
நல்லது. செய்யும் செயல்களில் தேவையற்ற இடையூறு ஏற்படலாம் என்பதால் முடிந்த வரை பொறுப்புகளை
அதிகரித்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன்
செல்வது நல்லது. பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து
கொள்வது, அதிக முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பது
சிறப்பு.
குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும்
வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க
உள்ள காலத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால்
சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கேது 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும்
சமாளிக்கும் பலம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். கடந்த கால மருத்துவக்
செலவுகள் சற்றே குறையும் என்றாலும் உணவு விஷயத்தில் கட்டுபாட்டை கடைபிடிப்பது நல்லது.
மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம்
உண்டாகும். தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவதும்
தூர பயணங்களை தவிர்ப்பதும் நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணமாகாதவர்களுக்கு
நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவி
ஒற்றுமையுடன் செயல்படுவதால் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சி
அளிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து குடும்பத் தேவைகள் யாவும் தடையின்றி பூர்த்தியாகும்
என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பூமி, மனை வாங்கும் விஷயத்தில் சிந்தித்து
செயல்படுவது சிறப்பு. கடன் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.
உத்தியோகம்
பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு
ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களை அடைய முடியும். எடுக்கும்
பணிகளை செய்து முடிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில்
நல்ல நிலையை அடைய முடியும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். நீங்கள்
உழைக்க வேண்டும் என நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. ஆரோக்கிய பாதிப்பால் எதிலும்
ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால்
அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் தொடர்புகளால் மேன்மைகளை அடைவீர்கள்.
பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சாதகமான நிலையினை
அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை கையாளும் போது
சற்று கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பெரிய மனிதர்களின்
நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பல பொதுநலக்
காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில்
சிறுசிறு தடைக்கு பின்பு வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள்.
மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பண வரவுகள் இருந்தாலும் அதிகப்படியான செலவுகள்
ஏற்படும் காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உங்களின் பேச்சிற்கு
மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும்
சந்தையில் கிடைப்பதால் பண வரவுகள் சிறப்பாக அமையும். நீர் வரத்தில் பிரச்சினை பங்காளிகளிடம்
கருத்து வேறுப்பாடு ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நவீன முயற்சிகளை
கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும்
வாய்ப்புகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் கடன் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு மனநிம்மதியை தரும்.
கலைஞர்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று உங்களின்
நடிப்புத் திறன் வெளிச்சத்திற்கு வரும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுகளால் மனநிறைவு
உண்டாகும். அதிக அலைச்சலால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு இடையூறு ஏற்படும். புதிய முதலீடுகளில் சற்று கவனமாக
இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கடன்கள் சற்று இருக்கும். இசைத்துறையில்
உள்ளவர்களுக்கும் சாதிக்க கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடி வரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கித்தில் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் அன்றாடப் பணிகளில்
சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு
நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட உறவினர்களிடம்
பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆடம்பர
செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் திறம்பட செயல்பட ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது,
உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் நல்ல மதிப்பெண்களைப்
பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். விளையாட்டுப்
போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். பொழுது
போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும்.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை
உங்கள் ராசிக்கு கேது 6-ல் ராசியாதிபதி புதன் நட்சத்திரமான கேட்டையில்
சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து
வேறுப்பாடுகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குரு
வரும் 20-11-2020 முடிய 7-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு குடும்பத்
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம்
உண்டாகும். சனி 8-ல், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்
கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள்
உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் இருந்தால் லாபத்தினை அடைய முடியும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை
ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை
அனுசரித்து செல்வதால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள்
பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும்
இட மாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை
பெறுவார்கள்.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை
உங்கள் ராசிக்கு 12-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும்
8-ல் குரு, சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
உங்கள் தேக ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்
இருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை
அனுசரித்துச் செல்வது நல்லது. கேது 6-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 8-ல்
சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் அதிசாரமாக 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள்
எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதார நிலை சற்று சாதகமாக
இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எந்த பிரச்சினையும் சமாளித்து விட
முடியும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது
நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய
வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து
கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள்
உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற
நட்புகளை குறைத்து கொண்டு கல்வியில் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப்
பெற முடியும்.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை
உங்கள் ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், வரும்
14-09-2021 முடிய குரு அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள
போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும்.
எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல்
உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சனி
8-ல், ராகு 12-ல் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது உடல் நலத்தில் சற்று
அக்கறை எடுத்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது சற்று கவனத்துடன்
செல்வது நல்லது. கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில்
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும்
அனுசரித்து செல்வது நல்லது. நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் அதிக முதலீடுகளில்
சற்று எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து
செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும் பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின்
ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை
ஜென்ம ராசிக்கு கேது 6-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், உங்கள்
ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க
இருப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு
மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்லது
நடக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில்
லாபம் அதிகரிக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை கை
கால் அசதி சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிக்கலும்
ஏற்படாது. பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த
தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
ராகு 12-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின்
விருப்பம் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்
பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும்
அதன் மூலம் அனுகூலப் பலனையும் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது
நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை
ஜென்ம ராசிக்கு கேது 6-ல் குரு நட்சத்திரமான விசாகத்தில் சஞ்சரிப்பதும்,
9-ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்
காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும், வெற்றியும் கிட்டும். பணவரவுகள்
சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்-
மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எதிர்பாராத தனவரவுகளால்
கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். சனி 8-ல்
சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும்
சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து
வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில்
நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப்
பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும்
தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மேலதிகாரிகளிடம் பேசும் போது சற்று பொறுமையுடன் இருப்பது
மிகவும் உத்தமம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
அதிர்ஷடம் அளிப்பவை
எண் - 5,6,8,
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் -விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால்
ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால்
அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும
அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.
சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடப்பதால் தொடர்ந்து சனிக்கு பரிகாரம்
செய்வது அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய்
தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை
பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது.
No comments:
Post a Comment