மகரம் - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம்
பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இதுநாள் வரை 6, 12-ல் சஞ்சரித்த ராகு கேது தற்போது
ஏற்பட உள்ள இடபெயர்ச்சியால் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022
வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). சர்ப கிரகங்களான ராகு
ஜென்ம ராசிக்கு 5-ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சாரம்
செய்ய இருப்பதால் நீங்கள் வாழ்வில் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும். கேது 11-ல்
சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத்
தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவையற்ற
செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். ராகு 5-ல் இருப்பதால்
வயிறு பாதிப்பு, உற்றார் உறவினர்கள் பகை, பூர்வீக சொத்து ரீதியாக பிரச்சினை ஏற்பட வாய்ப்பு
உள்ளதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதி குறைவு
ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு சனி திருக்கணிப்படி ஜென்ம ராசியில்
சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன்
செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய
நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. எதிலும் எதிர் நீச்சல் போட்டால்
மட்டுமே இருப்பதை தக்க வைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று
கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான
பலனை அடைய இடையூறு ஏற்படும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க
வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்
என்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உங்களுக்கு கடன்கள்
அதிகரிக்கலாம் என்பதால் பொதுவாக உங்கள் பெயரில் கடன் வாங்குவதை தவிர்ப்பது அப்படி வாங்க
வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது
நல்லது.
இக்காலத்தில் தன காரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரமாக
(கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல்
13-04-2022 வரை சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகளில் முன்னேற்றம்
ஏற்படும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த
சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
கொடுக்கல்- வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின்
ஆதரவுகளால் தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள்,
ஊதிய உயர்வுகள் கிடைக்கும். எதிலும் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட
பணிகளில் திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ
செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். பயணங்களால்
அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. உணவு விஷயத்தில்
கட்டுப்பாடுடன் இருப்பது மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில்
தடைகள் நிலவினாலும் தீவிர முயற்சிக்கு பின்பு நல்லது நடக்கும். உற்றார் உறவினர்களிடம்
பேசும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும்
ஒன்று சேருவார்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக
செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக சிறிது மன நிம்மதி குறைவு ஏற்படும்,
உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் உங்களது உடல் நிலை
ஒத்துழைக்காது. எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சில
தடைகளுக்குப் பின் கிடைக்கும். பொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத
உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைபளு குறையும். புதிய வேலை தேடுபவர்கள்
கிடைப்பதை தற்போது பயன்படுத்தி கொண்டால் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் உங்களது
உழைப்பு சற்று அதிகமாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சினைகளை சமாளிக்க
முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள்
மூலம் அனுகூலம் ஏற்படும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி பொறாமைகளால்
மனநிம்மதி குறையும். நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். அதிக முதலீடு
விஷயத்தில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சற்று
கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய
தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனத்துடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். பிறருக்கு
முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை நீடித்தாலும் தீர்ப்பு உங்களுக்கு
சாதகமாக இருக்கும்.
அரசியல்
மேலிடத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள
வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்படாது. மக்களின் ஆதரவுகள் சிறப்பாக
இருப்பதால் எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன்
நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்
உழைப்பு அதிகமாக இருந்தாலும் பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். போட்ட
முதலீட்டை எடுத்து விட முடியும். வேலையாட்களை சற்று அனுசரித்து சென்றால் அவர்களது ஒத்துழைப்பு
சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் தக்க
நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் பங்காளிகளிடம் கருத்து வேற்றுமை
ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புகளை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள்
ஏற்ற இறக்கமாக இருக்கும். சுக வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது. ஆடம்பரச் செலவுகளை சற்று
குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
ரசிகர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும்
காரியங்களில் கவனமுடன் செயல்படவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில்
திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட திருமண சுப
காரியங்களில் தடை விலகி கைகூடும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
பண வரவுகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். முன்
கோபத்தை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
கல்வியில் சிறுசிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த
நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது
நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். நல்ல நட்புகளால் பல நன்மைகள்
உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் நற்பலன் கிடைக்கும்.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும்
உங்கள் ராசிக்கு 5-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்திலும்
சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஒரளவுக்கு கிடைத்து உங்களது அனைத்து தேவைகள் பூர்த்தியாகும்.
கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது.
புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வழியில் சுப செலவுகள்
ஏற்படும். நவீன கரமான பொருட்களை வாங்குவீர்கள். பங்காளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது
நல்லது. குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்
போது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது
காப்பாற்ற முடியும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் இருப்பதை
அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து
ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகப்படியாக இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை
உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு
5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதையும்
எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும்.
உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும்
ஆற்றல் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக 06-04-2021 முதல் தன
ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் மங்களகரமாக சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்
தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.
செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும்
ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் தொடர்புடைய
வாய்ப்புகளால் லாபம் அமையும். மற்றவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது
உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு வாகனங்கள் வாங்கும்
முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப்
பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில்
பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை
பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
ராகு ரோகிணி நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ராகு
5-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எந்தவித
எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை
சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம்
அனுகூலப்பலனை அடைய முடியும். குரு வக்ர கதியில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் ஏற்ற
இறக்கமாக தான் இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை
பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க
வேண்டியிருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும்
அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு
மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை
சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும்
என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள்
கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது
உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடைபெற்றாலும் ராகு 5-ல் கிருத்திகை
நட்சத்திரத்திலும், கேது 11-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் இருக்கும் நெருக்கடிகள்
குறைந்து ஏற்றங்கள் ஏற்படும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல்
தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். எந்தவொரு
முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த
பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவியிடையே
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள்
சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிலும் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா
சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
அனுகூலப்பலன் பெற முடியும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது
கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும்.
வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள்
நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள்.
ராகு கிருத்திகை நட்சத்திரத்தில்,
கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை
உங்கள் ராசிக்கு 5-ல் ராகு கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 11-ல்
விசாக நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும், ஆண்டு கோளான குரு 2-ல் சஞ்சாரம் செய்வதாலும்
உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும்.
கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து
விஷயங்களில் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்களை
அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறிது மந்த நிலை இருந்தாலும் எதையும்
சமாளிக்கும் பலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல
பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில்
ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற
முடியும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில்
வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும்
கிட்டும். வேலையாட்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல
மதிப்பெண்களை எடுக்க முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8
கிழமை - சனி, புதன்
திசை - மேற்கு
நிறம் - நீலம், பச்சை
கல் - நீலக்கல்
தெய்வம் - விநாயகர்
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு 5-ல் சஞ்சாரம் செய்வதால் ராகுவுக்கு
பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி
மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும
அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது, ஓம் ப்ரம்
ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ என்ற பிஜ மந்திரத்தை கூறி வருவது நல்லது.
ஏழரை சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது,
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. சனி பகவானுக்கு
கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்கள் மற்றும் கருங்குவளை பூக்களால்
அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது
கருப்புநிற ஆடை அணிவது நல்லது.
No comments:
Post a Comment