Thursday, August 27, 2020

கன்னி   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

 

கன்னி   - ராகு- கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இது நாள் வரை நிழல் கிரகமான ராகு 10-லும், கேது 4-லும் சஞ்சாரம் செய்ததால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் திருக்கணிப் பஞ்சாங்கப்படி வரும் 23-9-2020 முதல் 12-04-2022 வரை (வாக்கியப் பஞ்சாங்கபடி 01-09-2020 முதல் 21-03-2022 வரை). ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்த கால அலைச்சல்கள் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். கடந்த காலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்து லாபகரமான பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

குரு (மகர ராசியில்) வரும் 20-11-2020 முதல் 06-04-2021 வரையும் மற்றும் வரும் 14-09-2021 முதல் 20-11-2021 வரையும் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்கும் காலத்தில் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள்.

            குரு வரும் 20-11-2020 வரை சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதும் அடுத்து ருண ரோக ஸ்தானமான 6-ல் (அதிசாரமாக கும்ப ராசியில்) வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை மற்றும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை சஞ்சரிக்க உள்ள காலத்தில் உங்களுக்கு பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் சனி, கேதுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.

 

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை மிக சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் உடல் நலத்துடன் சுபிட்சமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலப்பன் கிடைக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம்

கடந்த கால தடைகள் விலகி பணியில் பதவி உயர்வுகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். இருக்கும் இடத்தில் கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல்கள் குறைந்து எதிலும் நிம்மதியாக இருக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் உங்களது வேலைபளு குறையும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

அரசியல்

பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் தேடி வரும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும்.

கலைஞர்கள்

திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையில் இருந்த பணத் தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து ரீதியாக சிறிது மன கவலை ஏற்படும்.

மாணவ மாணவியர்

கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

 

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 23-09-2020 முதல் 26-01-2021 வரை

உங்கள் ராசிக்கு 9-ல் ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், 3-ல் கேது கேட்டை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் இது வரை இருந்த அலைச்சல் டென்ஷன் குறைந்து உங்கள் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றிகளை அடைவீர்கள்.

ஜென்ம ராசிக்கு 5-ல் சனி சஞ்சரிப்பதும் வரும் 20-11-2020 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளுக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது கேட்டை நட்சத்திரத்தில் 27-01-2021 முதல் 01-06-2021 வரை

உங்கள் ராசிக்கு 9-ல் ராகு ரோகிணி நட்சத்திரத்திலும், 3-ல் கேது கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியம் நன்றாக இருந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்துடன் இனைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

ராகு ரோகிணி நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 02-06-2021 முதல் 05-10-2021 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் ரோகிணி நட்சத்திரத்திலும், கேது 3-ல் அனுஷ நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சற்று அனுகூலமான அமைப்பு என்றாலும் 5-ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்ற விட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன் தேடும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுவதில் தாமதநிலை ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும் என்றாலும் கூட்டாளிகளிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்து விடுவது உத்தமம்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது அனுஷ நட்சத்திரத்தில் 06-10-2021 முதல் 08-02-2022 வரை

ஜென்ம ராசிக்கு ராகு 9-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 3-ல் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 5-ல் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை எடுக்க வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் விட்டு கொடுத்த நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தேவையற்ற இடையூறு ஏற்படும். 5-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 20-11-2021 முதல் 6-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை அடைய முடியும்.

ராகு கிருத்திகை நட்சத்திரத்தில், கேது விசாக நட்சத்திரத்தில் 09-02-2022 முதல் 12-04-2022 வரை

ராகு ஜென்ம ராசிக்கு 9-ல் கிருத்திகை நட்சத்திரத்திலும், கேது 3-ல் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் எதையும் சமாளிக்கும் சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் அன்றாட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும், குரு 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 4,5,6,7,8

நிறம் - பச்சை, நீலம்

கிழமை - புதன், சனி

கல் - மரகத பச்சை

திசை - வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

 

பரிகாரம்

குரு பகவான் சில நாட்கள் சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும் அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும்.

No comments: