Friday, August 28, 2020

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 05 வரை 2020

 

வார ராசிப்பலன்

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 05 வரை 2020 

ஆவணி 14 முதல் 20 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்

 

சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

30.08.2020

 

 சனி(வ) சந்தி

சூரிய புதன்

குரு(வ)  கேது

 

  

 


கிரக மாற்றம்

01-09-2020 கடக சுக்கிரன் அதிகாலை 02.04

02-09-2020 கன்னி புதன் பகல் 12.02

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மகரம்            29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.

கும்பம்           01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை.

மீனம்             03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

30.08.2020 ஆவணி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

 

31.08.2020 ஆவணி 15 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

 

04.09.2020 ஆவணி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியை குரு பார்வை செய்வதும், சுக்கிரன் 3, 4-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிறப்பான பண வரவால் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31, 1, 2.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3, 4, 5.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்ததெல்லாம் நடக்கும் யோகம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் பெற முடியும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     3, 4, 5.

சந்திராஷ்டமம் -      29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு  செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாராள தனவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31.

சந்திராஷ்டமம் -      01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். குரு 5-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்-- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31, 1, 2.

சந்திராஷ்டமம் -      03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற நெருக்கடி ஏற்படலாம் என்பதால் எதிலும் ஓருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3, 4, 5.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மைகள் உண்டாகும்.  சிறப்பான பணவரவுகள் உண்டாவதோடு நெருங்கியவர்களின் உதவியும் கிடைப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்--- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீடு மற்றும் வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     3, 4, 5.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவால் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன், உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு 12-ல் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுதன் மூலம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31, 3, 4, 5.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை  துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் ஏற்படும். கணவன்-- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும். சனி பகவான் வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

சமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 6-லும், சனி 11-லும் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தடை தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்--- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். முருக வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -     30, 31, 3, 4, 5.

No comments: