Thursday, August 13, 2020

வார ராசிப்பலன் - ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை 2020

வார ராசிப்பலன் - ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை 2020 

ஆடி 32 முதல் ஆவணி 06 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

செவ்

 

 

சந்தி சுக்கி ராகு

 

திருக்கணித கிரக நிலை

16.08.2020

சூரிய புதன்

 சனி (வ)

 

குரு (வ) கேது

 

 

 

 

கிரக மாற்றம்

16-08-2020 சிம்மத்தில் சூரியன் இரவு 07.11 மணிக்கு

16-08-2020 மேஷத்தில் செவ்வாய் மாலை 06.28 மணிக்கு

17-08-2020 சிம்மத்தில் புதன் காலை 08.28 மணிக்கு

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மிதுனம்         14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

கடகம்            17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.

சிம்மம்           19-08-2020 அதிகாலை 04.10 மணி முதல் 21-08-2020 அதிகாலை 05.15 மணி வரை.

கன்னி            21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

16.08.2020 ஆடி 32 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

 

21.08.2020 ஆவணி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும். கணவன்-- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல வாய்ப்புள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     16, 21, 22.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் சூரியன் 4-ல், செவ்வாய் 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பணம் கொடுக்க- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் கிடைக்கும். பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     17, 18.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும்.  பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்-- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற முடியும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     16, 19, 20.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் இனி 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நெருங்கியவர்களிடம் பேசும் போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்-- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பண வரவுகள் தேவைகேற்ற படி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும். மகாலட்சுமி வழிபாடு சுபிட்சத்தை தரும்.

வெற்றி தரும் நாட்கள் -     17, 18, 21, 22.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் சுபாவம் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -     16, 19, 20.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. எளிதில் முடியக்கூடிய காரியங்களும் தாமதமாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்-- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சாதகமான பலனை அடையலாம். கொடுக்கல்-- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     16, 17, 18, 21, 22.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க தயங்காத பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து மேன்மைகளை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள நெருக்கடிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்-- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஒரு சில அனுகூலங்களை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சனிபகவானை வழிபடுவது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் -     17, 18, 19, 20.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எவ்வளவு தான் கற்றறிந்திருந்தாலும் அகம்பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். விநாயகர் சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.

வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் - 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் சூரியன், புதன் சஞ்சரிக்க உள்ளதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல்-- வாங்கல் ஓரளவு சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் வீண் அலைச்சல்கள், டென்ஷன்கள் ஏற்படக்கூடும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயக பெருமானுக்கு அருகம் புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     16, 21, 22.

சந்திராஷ்டமம் - 17-08-2020 அதிகாலை 00.50 மணி முதல் 19-08-2020 அதிகாலை 04.10 மணி வரை.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், தேவையற்ற பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கணவன்-- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்-- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது போன்வற்றை தவிர்ப்பது உத்தமம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது, சிவ ஸ்தோத்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     16, 17, 18.

சந்திராஷ்டமம் - 19-08-2020 அதிகாலை 04.10 மணி முதல் 21-08-2020 அதிகாலை 05.15 மணி வரை.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடைப்பெற்றாலும் இவ்வாரத்தில் 3-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன், 11-ல் குரு, கேது சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் குறைந்து உங்கள் பலம் கூடும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். கொடுக்கல்-- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கினால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -     17, 18, 19, 20.

சந்திராஷ்டமம் -      21-08-2020 அதிகாலை 05.15 மணி முதல் 23-08-2020 காலை 06.05 மணி வரை.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். கணவன்--- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். சுப செலவுகள் உண்டாகும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     19, 20, 21, 22.


No comments: