Tuesday, April 28, 2020

மே மாத ராசிப்பலன் 2020


மே மாத ராசிப்பலன் 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சூரிய
புதன்
சுக்கி

ராகு


திருக்கணித கிரக நிலை


சனி செவ் குரு

கேது 




கிரக மாற்றம்
04-05-2020 கும்பத்தில் செவ்வாய் இரவு 08.40 மணிக்கு
09--05-2020 ரிஷபத்தில் புதன் காலை 09.46 மணிக்கு
11-05-2020 சனி வக்ர ஆரம்பம் காலை 08.33 மணிக்கு
14-05-2020 சுக்கிரன் வக்ர ஆரம்பம் பகல் 12.33 மணிக்கு
14-05-2020 ரிஷபத்தில் சூரியன் மாலை 05.18 மணிக்கு
14-05-2020 குரு வக்ர ஆரம்பம் இரவு 07.44 மணிக்கு
24--05-2020 மிதுனத்தில் புதன் இரவு 11.54 மணிக்கு

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் உங்கள் ராசியாதிபதி செவ்வாய் வரும் 4-ஆம் தேதி முதல் 11-ல் சஞ்சரிக்க உள்ளதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். வரும் 14-ஆம் தேதி முதல் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் அனுகூலப்பலன் ஏற்படும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். கல்வி தரமும் உயர்வடையும்.
பரிகாரம் - -- சனி பகவான் வழிபாடு செய்வதாலும், சிவ வழிபாடு செய்வதாலும் பிரச்சினைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்     -- 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் என்றாலும் சூரியன் 12-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளும் ஓரளவுக்கு கிடைத்து குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்தால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். வியாபார விருத்திக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பெயர் பெற முடியும்.
பரிகாரம் - -- செவ்வாய் கிழமைகளில் முருக பெருமானையும் துர்கையம்மனையும் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்     -- 10-05-2020 அதிகாலை 05.03 மணி முதல் 12-05-2020 காலை 10.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் குரு சனி சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் மாத முற்பாதியில் -சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் அனுகூலங்கள் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைகள் மாத முற்பாதியில் குறையும். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு உற்சாகமின்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும்.
பரிகாரம் - -- சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானை வழிபடுவதாலும் சனிக்கவசங்கள் படிப்பதாலும் ஏற்படும் கஷ்டங்கள் ஓரளவு குறையும். எள் கலந்த அன்னத்தை காகத்திற்கு படைப்பது நல்லது.
சந்திராஷ்டமம்     --  12-05-2020 காலை 10.16 மணி முதல் 14-05-2020 இரவு 07.20 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும், 11-ல் சுக்கிரன், இம்மாதத்தில் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய காலமாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்வர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்க கூடிய வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவார்கள்.
பரிகாரம் - -- முருக வழிபாடு, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 14-05-2020 இரவு 07.20 மணி முதல் 17-05-2020 காலை 07.15 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி, லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். 5-ல் கேது வரும் 5-ம் தேதி முதல் 7-ல் செவ்வாய் சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான பலன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்ணை பெற்று கல்வியில் உயர்வடைவார்கள்.
பரிகாரம் - -- வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலை சாற்றி, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்     -- 17-05-2020 காலை 07.15 மணி முதல் 19-05-2020 இரவு 07.54 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க உள்ளதாலும் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாத கோளான சூரியன் வரும் 14-ஆம் தேதி வரை 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம் - -- ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. மேலும் சிவ வழிபாடும் மேற்கொள்ளலாம்.
சந்திராஷ்டமம்     -- 19-05-2020 இரவு 07.54 மணி முதல் 22-05-2020 காலை 07.35 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் சனி, குரு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் முன்னேற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் ஏற்படும். எதிர்பார்த்த அனுகூலங்களை அடைய கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம் - -- விநாயகரையும் சிவ பெருமானையும் வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மையான பலன்களை அடையலாம்.
சந்திராஷ்டமம்     -- 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். நவீன பொருட்கள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிக்கல்கள் குறைந்து நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த மாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.
பரிகாரம் - -- தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால்  குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். மேலும் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்     -- 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி குரு 2-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க உள்ளதும் சாதகமாக அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் நற்பலனை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம் - -- சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வதாலும் சனிப்ரீதி ஆஞ்நேயரை வழிபாடு செய்வதாலும், துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வதாலும் துன்பங்கள் துயரங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்     -- 29-04-2020 இரவு 07.57 மணி முதல் 02-05-2020 அதிகாலை 01.05 மணி வரை மற்றும் 27-05-2020 அதிகாலை 01.25 மணி முதல் 29-05-2020 காலை 06.59 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியில் சனி, குரு, வரும் 5-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ல் சஞ்சரிக்க உள்ளதால் இருப்பதை அனுபவிக்க தடை தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் சற்றே ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் உதவியால் நெருக்கடிகள் சற்று குறையும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் - -- சிவ வழிபாடு செய்வதும் பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொண்டு நந்தி வழிபாடு செய்வதும் மேலும் அபிஷேக பொருட்களை கோவில்களில் வாங்கி கொடுப்பதும், முருக வழிபாடு மேற்கொள்வதும் மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020 அதிகாலை 03.08 மணி வரை மற்றும் 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை 10.20 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்பதால் உங்களுக்கு இருந்து வந்த தடைகள் எல்லாம் விலகி ஏற்றங்களை அடைவீர்கள். சிறப்பான பண வரவுகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். 5-ல் ராகு 12-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றங்கள் ஏற்படும். போட்டிகள் பல அதிகரித்தாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகி நற்பலன்களை பெறுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
பரிகாரம் - -- விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் ஏற்படும் தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம்     -- 04-05-2020 அதிகாலை 03.08 மணி முதல் 06-05-2020 அதிகாலை 03.15 மணி வரை மற்றும்  31-05-2020 காலை 10.20 மணி முதல் 02-06-2020 பகல் 12.00 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, குரு சஞ்சரிப்பதும், மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு 10-ல் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் சிறப்பான ஒத்துழைப்புகளால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
பரிகாரம் - -- புதன் கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணு பகவான் வழிபாடு செய்வதும், அம்மன் வழிபாடு செய்வதும் மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம்     -- 06-05-2020 அதிகாலை 03.15 மணி முதல் 08-05-2020 அதிகாலை 03.13 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

04.05.2020 சித்திரை 21 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

06.05.2020 சித்திரை 23 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

10.05.2020 சித்திரை 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

13.05.2020 சித்திரை 30 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

18.05.2020 வைகாசி 05 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

24.05.2020 வைகாசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியை திதி மிருகசிரீஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

27.05.2020 வைகாசி 14 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை



No comments: