Wednesday, April 8, 2020

கடகம்  - சார்வரி வருட பலன்கள் 2020-2021


கடகம்  - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல அறிவாற்றலும் கற்பனை சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.
இவ்வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பது கண்ட சனி என்பதால் நெருங்கியவர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் அனுகூலங்களை அடைய முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் மனைவி மூலம் தேவையற்ற வீண் செலவுகள், மன நிம்மதி குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மூலம் எதையும் சமாளிக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். புதிய வேலை தேடுபடுவர்கள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், எதிலும் சற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
இவ்வாண்டில் சர்பகிரகங்களான கேது 6-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும், அதன் பிறகு ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புமதான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சிலருக்கு அனுகூலமான பயணங்கள் ஏற்பட்டு அதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும், குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலத்தில் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. நீங்கள் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது மூலம் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்
இந்த வருடம் முழுவதும் ஆயுள் ஆரோக்கியத்திற்கு காரகனான சனிபகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் பணி சுமை அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும். பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் அனுகூலங்களை அடைய முடியும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். 
குடும்பம் பொருளாதாரம்
சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது முன்கோபத்தைக் குறைப்பது மிகவும் நல்லது. குரு வரும் 30-06-2020 முடியவும், அதன் பிறகு 20-11-2020 முதல் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தாராள தன வரவுகள், கடந்த கால நெருக்கடிகள் குறையும் வாய்ப்பு உண்டாகும். அசையாச் சொத்துகள் மூலமும் அனுகூலங்கள் கிட்டும். திருமண சுப காரியங்களில் இருந்த தடை விலகி தடபுடலாக நிறைவேறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மகிழ்ச்சியான நிலை உண்டாக்கும்.
உத்தியோகம்
சனி 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பதும், உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் தூர பயணங்களும் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து சென்றால் இருக்கும் அனைத்து சிக்கலையும் சமாளித்து வலமான பலன்களை அடைய முடியும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
பெண்கள்
பெண்களுக்கு சிறுசிறு வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்க பேச்சில் பொறுமையாக இருப்பது, விட்டு கொடுத்து செல்வது சிறப்பு.  மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அனைத்து தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கு இருந்த வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் பிறரை நம்பி பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. அனைத்து செயல்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடம் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.   
அரசியல்
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற எதிர்நீச்சல் போட்டவது எதையும் சாதிக்கும் ஆற்றலும் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு விரயங்கள் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்
விவசாயத்தில் பட்டபாட்டிற்கேற்ற பலனைப் பெற்று விட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். கால் நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடு உண்டாகும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு தாமதம் பட்டாலும் தக்க சமயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகி உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்துச் செல்லுவதும் அவசியம். சூழ்நிலை காரணமாக அதிக அலைச்சல், அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைப்பது உத்தமம்.

மாதப்பலன்
சித்திரை       
இம்மாதம் சூரியன் 10-ல், சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாகவும் ஏற்றங்கள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். ராகுவுக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.
வைகாசி 
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும்  பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவு மிகச் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீன பொருடகள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் திறம்பட செயல்பட்டு உயர்வுகளை அடைவார்கள். முருக வழிபாடும் விநாகர் வழிபாடும் செய்வது நல்லது.
ஆனி                
மாத கோளான சூரியன் 12-ல் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது நல்லது.
ஆடி                   
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும், 6-ல் கேது மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை வீண் வாக்குவாதம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள்.  அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமையான செயல்பாடுகளால் மதிப்பும் மரியாதையும் உயரும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிவனை வழிபடுவது நல்லது.
புரட்டாசி      
மாத கோளான சூரியன் 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபுரண வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்வது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி             
ஜென்ம ராசிக்கு 4-ல் புதன் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் அடைய வேண்டியதை தக்க சமயத்தில் அடையும் வாய்ப்பு உண்டாகும். சூரியன் 4-ல், குரு 6-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்பு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தக்க சமயத்தில் கிட்டும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு குறைவதால் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவனை வழிபடவும்.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் வளமான பலன்களை எளிதில் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி  கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நவீன பொருட்கள் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். சிலருக்கு சொந்த வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளவும்.
மார்கழி         
ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய சிறப்பான மாதமாக இம்மாதம் இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை ஆபரணம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். முருக வழிபாடு விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
தை                    
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதாலும் சிறப்பான பணவரவுகள் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. சூரியன் 5-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். தொழிலில் தேக்கங்கள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
மாசி                  
குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதும் வளமான பலன்களை தரும் அமைப்பாகும். மாத கோளான சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
பங்குனி
உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன் 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமான நிலை ஏற்படும். சிறப்பான பொருளாதார நிலையால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடும். பொன் பொருள் சேரும. கடன் பிரச்சினைகள் சற்று குறையும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவதன் மூலம் லாபகரமான பலன்கள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடு உண்டாகும். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலங்களை அடையலாம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                   நிறம் - வெள்ளை, சிவப்பு                கிழமை - திங்கள், வியாழன்
கல் -  முத்து                       திசை - வடகிழக்கு                தெய்வம் - வெங்கடாசலபதி

No comments: