Thursday, April 9, 2020

மகரம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


மகரம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
பிடித்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரராக இல்லாமல் எதிலும் நிதானமுடன் செயல்படும் மகர ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. இதனால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
இவ்வாண்டில் தன காரகன் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம ராசி மற்றும் 12-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக தான் இருக்கும். வரவுக்கு மிறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு பார்வை 7-ம் வீட்டிற்கு உள்ளதால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு அனுகூலங்கள் இருந்தாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, வேலையாட்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவதும். அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.  உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகளும், பண வரவும் இருக்கும் என்றாலும் வேலைபளு சற்று அதிகப்படியாக இருக்கும். சக ஊழியர்களிடமும், மேலதிகாரிகளிடமும் பேசும் போது சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது.  பொதுவாக ஏழரைச்சனி நடைபெற்றால் கெடுப்பலன்கள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மற்ற ராசி நேயர்களுக்கு கெடுதியை தருவது போல அதிக கெடுதியை உங்களுக்கு ஏற்படுத்தாது.
இவ்வாண்டில் உங்களுக்கு மிகவும் சிறப்பான அமைப்பு என்னவென்றால் உங்கள் ராசிக்கு சர்ப கிரகமான ராகு 6-ல் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும் அதன் பின் ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் கேது 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொண்டு வெற்றி மேல் வெற்றி அடையும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் தக்க சமயத்தில் பண வரவுகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு, மந்தமான நிலை ஏற்படலாம் என்பதால் நேரத்திற்கு உணவு உண்பது, முடிந்த வரை பொறுப்புகளை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் இந்த வருட சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றல் உண்டாகும்.  மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, வீண் அலைச்சலைக் குறைக்கும்.
குடும்பம் பொருளாதாரம்
சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, சுபிட்சம் உண்டாகும். திருமண சுப காரியங்கள் கைகூடக் கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் மிகவும் நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைத்தாலும் வேலைபளு மிகவும் அதிகப்படியாக இருந்து அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பார்த்து கொள்ளவும்.
பெண்கள்
உங்களது ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பது மன அமைதியை தரும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். பணவரவுகள் சற்று அனுகூலமாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கொடுக்கல்- வாங்கல்
சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஏற்படும் எந்த வித சூழ்நிலையையும் சமாளித்து ஏற்றம் அடைவீர்கள். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் லாபம் கிட்டும் என்றாலும் ஏழரை சனி நடப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக் கூடும் என்பதால் பெரிய தொகைகளை கையாள்வதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப் பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது சிறப்பு. எடுக்கும் முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். தேவையற்றப் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் உடல் நிலை சோர்வடையும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பங்காளிகளை அனுசரித்து செல்வது மூலம் பெரிய பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
கலைஞர்கள்
ஏழரைச் சனி நடைபெறுவதால் தொழிலில் முன்னேற்றத் தடைகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவ- மாணவியர்
மாணவர்களின் கல்வியில் சற்று மந்தமான நிலை எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவிற்கு படிப்பில் கவனம் குறைவு போன்றவை இருந்தாலும் கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் மன நிறைவை தரும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்றாலும் 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய அளவுக்கு உங்கள் பலமும் வலிமையும் கூடும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆடை அபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைவீர்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். கடன்கள் சற்று குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் கா£ரியங்களில் நிதானம் தேவை. குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்ற கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். முருகபெருமானை வழிபடுவது நல்லது.
ஆனி                
மாத கோளான சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
ஆடி                   
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.  குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். தடைபட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். சிறப்பான லாபங்களும் கிட்டும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிவ பெருமானை வழிபடவும்.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.
புரட்டாசி      
ஜென்ம ராசியில் சனி, 4-ல் செவ்வாய், 12-ல் குரு சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதமாகும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத்தையும் செய்யாது இருப்பது நல்லது. சிவபெருமானை வழிபடுவது நல்லது.
ஐப்பசி             
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் சூரியன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் அனைத்து வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து நல்ல லாபத்தினை அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் தொழில் அபிவிருத்தி ஆகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். துர்கையம்மனை வழிபடவும்.
மார்கழி         
ஜென்ம ராசியில் சனி, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கேது 11-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிரப்பதன் மூலம் அலைச்சல், டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ளலாம். சிவ மற்றும் துர்கை வழிபாடு செய்வது நல்லது.
தை                    
ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். முன்கோபத்தை குறைப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
மாசி                  
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் தேவையற்ற கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். குடும்பத்தில் அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கங்களும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவதால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். அம்மன் மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
மாத கோளான சூரியன் 3-ல், கேது 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றியும், தாராள தனவரவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் படிப்படியாக குறையும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு கிட்டும். புதிய வீடு, வண்டி, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் -  5,6,8      நிறம் - நீலம், பச்சை            கிழமை - சனி, புதன்
கல் - நீலக்கல்            திசை - மேற்கு                          தெய்வம் - விநாயகர்

No comments: