Thursday, April 9, 2020

விருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


விருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்தவொரு காரியத்தையும் திறமையாகச் செய்து முடிக்க கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட
விருச்சிக ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி இவ்வாண்டு முழுவதும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நனவாகும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் முற்றிலும் குறைந்து உங்களது கையிருப்பு அதிகரிக்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.
குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாண்டு சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும் அதன் பின்பு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டு கொடுத்து சென்றால் ஒரளவிற்கு ஒற்றுமையை அடைய முடியும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவது நல்லது.
குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. சனி ஆண்டு முழுவதும் சாதகமாக செயல்படுவதால் பொருளாதார நிலையில் சாதகமான பலன்கள், படிப்படியான முன்னேற்றங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களையும், அலைச்சலையும் குறைத்து கொள்வது நல்லது.  எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்ககூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.
குடும்பம் பொருளாதாரம்
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை, சிறப்பான பொருளாதார நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் கைகூடி மன நிம்மதி ஏற்படும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும்.
உத்தியோகம்
உத்தியோக ரீதியாக உயர்வான நிலையினை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும் அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.
பெண்கள்
பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அடைய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபங்களை பெற முடியும்.
அரசியல்
இந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். அசையாச் சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப் படுவீர்கள். பணம் வரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் பட பிடிப்பிற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். முழு முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய், சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கல்  சரளமான நிலையில் இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் வம்பு வழக்குகளும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிப்புகள் பெருகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு மூலம் லாபங்கள் தேடி வரும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
வைகாசி 
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல், சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்றாலும் 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வான நிலையை அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். ராகுவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
ஆனி                
உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களில் மேவையற்ற இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.
ஆடி                   
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
ஆவணி        
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல், சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
புரட்டாசி      
மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.
ஐப்பசி             
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சூரியன் 12-ல் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவிகளை பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முருக பெருமானை வழிபடுவது சிறப்பு.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு சனி 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் கடன்கள் படிப்படியாகக் மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெறுவீர்கள். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
மார்கழி         
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 9-ஆம் தேதி முதல் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும் சனி 3-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் வெற்றியினை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உற்றார் உறவினர்கள் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து மனநிம்மதி ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். மகாலட்சுமி வழிபாடு நற்பலனை அளிக்கும்.
தை                    
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் சூரியன், சனி 3-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரியங்களில் நல்ல செய்தி கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
மாசி                  
சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும் என்றாலும் குரு 3-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
பங்குனி
உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடையும் வாய்ப்பு இருந்தாலும் செவ்வாய், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை சற்று குறைக்கவும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                   நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,         கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம்,                              திசை - தெற்கு                           தெய்வம் - முருகன்


No comments: