Wednesday, April 8, 2020

ரிஷபம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


ரிஷபம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் சார்வரி வருடத்தில் உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் திருக்கணிதப்படி இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். அது மட்டுமின்றி ஆண்டு கோளான குருபகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கடந்த கால பொருட் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபத்தினை அடைந்து விட முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்தால் மேலும் அனுகூலமான பலன்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆற்றல், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.
சர்ப்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன் பின்பு ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். இவ்வருடத்தில் குரு பகவான் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொருளாதார நிலை சற்று சாதகமற்று இருக்கும் என்பதால் இக்காலத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது, எதிலும் சிக்கனமான செயல்படுவது நல்லது. இவ்வருடத்தில் சனி பகவான் சாதகமாக இருப்பதால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியம் சற்று சாதகமாக இருக்கும். நெருங்கியவர்களால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சர்ப்பகிரகங்கள் சாதகமற்று இருப்பதால் தேவையற்ற அலைச்சல் நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம் என்பதால் பொதுவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
குடும்பம் பொருளாதாரம்
சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சாமளிக்கும் பலம் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மண வாழ்க்கை எளிதில் அமையும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். நெருங்கியவர்களிடம் கவனமுடன் இருப்பது நல்லது. 
உத்தியோகம்
உத்தியோகத்தில் பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அடையும் வாய்ப்பு உண்டு. திறமைக்கேற்ற கௌரவமான நிலையினை அடைவீர்கள். பொருளாதார நிலையும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். நல்ல நிர்வாகத் திறனும் பலரை அதிகாரம் செய்யக் கூடிய ஆற்றலும் உண்டாகும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடல் அசதி காரணமாக உங்கள் பணியை சிறப்பாக செய்ய இடையூறுகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். எந்த வித மறைமுக எதிர்ப்புகளையும் வெல்லக் கூடிய ஆற்றலும் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.
பெண்கள்
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். மணமாகாத கன்னியருக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தால் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உண்டாகலாம். எந்த செயலிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
பணம் கொடுக்கல்- வாங்கல் உங்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் தாரளமாக லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை கொண்டு செய்யும் செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ஆண்டின் முற்பாதியில் சிறுசிறு ஏற்ற தாழ்வுகளை எதிர் கொண்டாலும் கார்த்திகை 5-ல் (20-11-2020) ஏற்படும் குரு மாற்றத்திற்குப் பிறகு உங்களது பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும்.
அரசியல்
நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும். மக்கள் செல்வாக்குக்கு காரகனாகிய சனி பகவான் 9-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது ஒரளவுக்கு மேன்மையை உண்டாக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடி வரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தடையின்றி காப்பாற்றி விடுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கட்சிப் பணிக்காக எதிர்பாராத வீண் செலவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் வாய்ப்புகள் ஆண்டின் பிற்பாதியில் எளிதில் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களை நிறைவேற்ற முடியும். ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் சிறப்பான லாபம் கிட்டும். பங்காளிகளிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
கலைஞர்கள்
இந்த ஆண்டு கலைஞர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கினை உண்டாக்கும் ஆண்டாக அமையும். ரசிகர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் திறமைகளுக்கேற்ற கதாபாத்திரங்களும் கிடைக்கும். ஆண்டின் மத்தியில் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் உங்களது கனவுகள் நிறைவேறும் காலமாக இருக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். நல்ல நண்பர்களின் நட்பு உங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனத்துடன் இருப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. கல்விக்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும்.

மாதப்பலன்
சித்திரை       
ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். விநாயகர் வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு பூர்வீக சொத்து  விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
ஆனி                
ஜென்ம ராசியில் சுக்கிரன் 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். சூரியன், ராகு 2-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய தொகைகளை மட்டும் ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
ஆடி                   
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தாராளமாக இருக்கும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
ஆவணி        
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பணம் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
புரட்டாசி      
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் இம்மாதத்தில் 3, 4-ல் சஞ்சரிப்பதும், 5-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சற்று அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். அம்மன் வழிபாடு பரிகாரம் செய்வது நல்லது.
ஐப்பசி             
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றங்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-- மனைவி இடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவது மிகவும் நல்லது.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் வரும் 5-ஆம் தேதி முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் பொருளாதார ரீதியாக மேன்மையை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் எளிதில் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கூட்டாளிகளும் சாதகமாக இருப்பார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.
மார்கழி         
இம்மாதம் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும். 7-ல் கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. விஷ்ணு பகவானை வழிபடவும்.
தை                    
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், குரு, சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலும் குறையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர பொருட்களும் வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சிவ வழிபாடு, அஷ்டலட்சுமி வழிபாடு செய்யவும்.
மாசி                  
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை நிலவும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். விநாயகர் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
பங்குனி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 10,11-ல் புதன் சஞ்சரிப்பதும், குரு 9-ல் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பொன் பொருள் சேரும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். இடமாற்றம் மற்றும் ஊர்மாற்றம் போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8             நிறம் - வெண்மை, நீலம்,          கிழமை - வெள்ளி, சனி
கல் -  வைரம்              திசை - தென்கிழக்கு,                  தெய்வம் - விஷ்ணு, லக்ஷ்மி


No comments: