சித்திரை 6 முதல் 12 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
புதன்
|
சூரிய
|
சுக்கி
|
ராகு
|
சந்தி
|
திருக்கணித கிரக நிலை
|
|
|
சனி செவ் குரு
|
|
||
கேது
|
|
|
|
கிரக மாற்றம்
25-04-2020 மேஷத்தில் புதன்
அதிகாலை 02.25 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கும்பம்
17-04-2020 பகல் 12.17 மணி முதல்
20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.
மீனம்
20-04-2020 அதிகாலை 00.37 மணி
முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.
மேஷம்
22-04-2020 பகல் 01.18 மணி முதல்
25-04-2020 அதிகாலை 01.15 மணி வரை.
ரிஷபம்
25-04-2020 அதிகாலை 01.15 மணி
முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.
இவ்வாரத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2--ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு
சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ராசியாதிபதி
செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார
ரீதியாக அனுகூலங்களை பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்ப
தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை
தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். ஜென்ம ராசியில் சூரியன்
சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும், செலவுகளை குறைத்துக் கொள்வதன்
மூலம் நற்பலன்களை அடையலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால்
ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தர கூடிய இனிய
நிகழ்ச்சிகள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான
நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்க சற்று தாமதம்
உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது.
மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிவ
வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23, 24.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
சாமர்த்தியமாகவும்,
சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி
நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் குரு, 11-ல் புதன் சஞ்சரிப்பதால்
எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில்
இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ராகு 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்-
மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, பேச்சில்
நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர
செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைய முடியும். கேது 8-ல்
சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள்
தோன்றி மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்களால் கிடைக்க
வேண்டிய உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம்
உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து
நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில்
இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த
அனுகூலங்களை அடைய முடியும். சிவ பெருமானையும், துர்க்கையம்மனையும் வணங்கி
வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 25.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள்
ராசியாதிபதி புதன் 10-ல், மாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால்
எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்கள்
உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பொருளாதார
நிலை சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் குரு,
செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்ற
பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை
எதிர்கொள்ள நேரிடும். 7-ல் கேது சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களை அனுரித்து
செயல்படுவது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும்.
கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில்
வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் தொடர்புகளால் அனுகூலங்களை
அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்களுக்கு அரசு வழியில்
எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
முருக வழிபாடு செய்வது, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது
நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 24.
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம்,
பூசம், ஆயில்யம்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு
எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதும், 6-ல் கேது, 10-ல்
சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா
வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவு
பெற்று கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் குறையும் வாரமாக இவ்வாரம் இருக்கும்.
சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய
முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால்
கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து
நடந்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை
ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார்
உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில்
நிதானத்தை கடைப்பிடித்து நல்லது. கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால்
அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும்
பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். முருக வழிபாடு, உக்கர தெய்வங்களை வழிபாடு செய்வது
மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25.
சந்திராஷ்டமம் - 17-04-2020 பகல் 12.17 மணி முதல் 20-04-2020 அதிகாலை 00.37 மணி வரை.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
சூது வாது அறியாமல் அனைவரையும்
எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன்
9-ல் சஞ்சரிப்பதும், 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு
என்பதால் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் எல்லாம் குறைந்து வலமான
பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் 10-ல், ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும்
முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்-
மனைவியிடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில்
எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால்
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று
கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும்.
கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள்
கிடைக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கு சற்று தாமத
நிலை உண்டாகும். மாணவர்களுக்கு உடல் நிலையில் சற்று மந்தநிலை ஏற்படும் என்பதால்
உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் செயல்படுவது உத்தமம். விநாயகரையும் விஷ்ணுவையும்
வழிபடுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 25.
சந்திராஷ்டமம் - 20-04-2020 அதிகாலை 00.37 மணி முதல் 22-04-2020 பகல் 01.18 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை
மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல்
குரு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய
வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் இருக்கும்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள்
போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன்
பிரச்சினைகள் சற்றே விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து
சேரும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும்
என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கேது 4-ல், சனி,
செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறு, தேவையற்ற அலைச்சல்
உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால்
எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள்
தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்-
வாங்கல் லாபகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த
மதிப்பெண்களை பெற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
பிரதோஷ தினத்தன்று சிவ வழிபாடு செய்வதும் விநாயகரை வழிபடுவதும் மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21.
சந்திராஷ்டமம் - 22-04-2020 பகல் 01.18 மணி முதல் 25-04-2020 அதிகாலை 01.15 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா
ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சனி, செவ்வாய், 7-ல் சூரியன்
சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். வீண் பிரச்சினைகள்,
தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள், வீண் வாக்குவாதங்கள்
ஏற்படலாம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி பேச்சில்
நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது
நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணம்
வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு
வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலையில் சோர்வு, கை, கால் வலி ஏற்பட்டு
அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து
நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக
எதிர்ப்புகள் அதிகரித்தாலும் கேது 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல்
போட்டவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம்
தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. சிவ வழிபாடு முருக வழிபாடு
செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 24.
சந்திராஷ்டமம் - 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
நியாய அநியாயங்களை பயமின்றி
தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
செவ்வாய்- சனி சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும்
மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் தாராள தனவரவால்
சகலவிதத்திலும் அனுகூலம் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால்
குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன்
செயல்பட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் ஆடம்பர
பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன்
மூலம் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு
இருப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். தொழில்,
வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பணம்
கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்கள் தக்க சமயத்தில் வசூலாகி மன
மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால்
தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலை
பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். அம்மன் வழிபாடும் அஷ்டலட்சுமி
வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை
கொண்ட தனுசு ராசி நேயர்களே, குரு பகவான் அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதாலும், புதன்
கேந்திர ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதாலும் தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து
தேவைகளும் பூர்த்தியாக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில்
வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நவீன
பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். 2-ல் சனி, செவ்வாய்
சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்து
செல்வதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது சிறப்பு.
பணம் கொடுக்கல்- வாங்கலில் கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்லது நடக்கும். கொடுத்த
கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய
உயர்வுகளையும், கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். தொழில், வியாபாரம்
தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். நல்ல வாய்ப்புகளும் கிடைக்கப்
பெற்று அபிவி-ருத்தியும் பெருகும். மாணவர்கள் நல்ல நிலை பெற்று பள்ளி கல்லூரிக்கு
பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது, முருக வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 19, 25.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும்
அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி--
செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக சிறிது மருத்துவ செலவுகள் செய்ய
நேரிடும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன்
இருப்பது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் பஞ்ச
ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தக்க சமயத்தில் தகுந்த உதவிகள்
கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன்
சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை
குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில்
கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் இருப்பது
நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில்,
வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் சற்று
சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து
செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின்
பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் பொற்றோர்களிடம் நல்ல பெயர் எடுப்பார்கள்.
முருக வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சூரியன்,
4-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை
பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள்
அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக
எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும்
அபிவிருத்தியை பெருக்க உதவும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உங்களது அனைத்து
தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். திருமண சுபகாரிய முயற்சியில்
தேவையற்ற இடையூறு ஏற்படும். 12-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய
வீண் செலவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள்
வழியில் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்
மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான
பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும்
பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். சனி பகவானை வழிபடுவது,
துர்க்கையம்மனை தரிசிப்பதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23, 24.
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம்,
உத்திரட்டாதி, ரேவதி .
பொறுமையும் தன்னம்பிக்கையும்
கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குரு
அதிசாரமாக லாப ஸ்தானமான 11-ல் சனி- செவ்வாய் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர்,
வெளிநாட்டு தொடர்புகளாலும் லாபங்கள் உண்டாகும். தாராள தனவரவு ஏற்பட்டு
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சூரியன் 2-ல்
சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து
சென்றால் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன்
ஏற்படும். ராகு 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது
நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்-
வாங்கலில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும்
ஏற்படாது. அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால்
வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின்
பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப்
பெற முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி
ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிவ வழிபாடும் முருக வழிபாடும்
செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 25.
No comments:
Post a Comment