Thursday, April 9, 2020

மீனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021


மீனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
நீதி நேர்மை தவறாமல் நடக்கும் பண்பும், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றலும் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த சார்வரி வருடத்தில் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிப்படி இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் லாப ஸ்தாகமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பாகும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் அனைத்தும் குறையும், இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். கடன்களை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களின் உபசரணைகள் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரை கைபிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபாரத்தில் கடந்த கால தேக்கங்கள் முற்றிலும் விலகி சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு தொழிலை விரிவு படுத்தும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும்.
உங்கள் ராசிக்கு 10-ல் குரு பகவான் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) சஞ்சரிப்பதால் இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பதும், ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வதும் நல்லது. சர்ப கிரகமான ராகு வரும் புரட்டாசி 7 (23-09-2020) முதல் உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றியும் உங்களுக்கு இருக்கும் சிறுசிறு அலைச்சல்கள் குறையும் வாய்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மந்த நிலை விலகும். மனைவி பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றத்தைப் பெறுவீர்கள். கடந்த கால உடல் ரீதியான பிரச்சினைகள் முழுமையாக குறைந்து மன நிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைவதால் பிரிந்தவர்களும் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.
குடும்பம் பொருளாதாரம்
குடும்பச் சூழ்நிலையானது மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் கனவுகள் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு அழகிய குழந்தை பாக்கியம் கிட்டும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. ஆண்டின் முற்பாதியில் ராகு 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் இருக்கும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் கடந்த கால நெருக்கடிகள் விலகி மன நிம்மதி ஏற்படும். செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பயணங்களால் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும்.
கொடுக்கல்- வாங்கல்
இந்த ஆண்டில் சனி 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் விலகி மன நிம்மதி ஏற்படும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் ஏற்றமான பலன்களை பெற முடியும். புதிய நட்புகள் கிடைத்து பல்வேறு வகையில் வளமான பலனை அடைவீர்கள்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்
எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். 
கலைஞர்கள்
உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் கைக்கு கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்த கால மந்த நிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசியதிபதி குரு, சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். சிவ மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வைகாசி 
மாத கோளான சூரியன் 3-ல், குரு, சனி 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமான பதவிகள் தேடி வரும். பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
ஆனி                
உங்கள் ராசிக்கு சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், சோர்வு மந்த நிலை போன்றவையும் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் கடன்களைக் குறைக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தடை தாமதம் உண்டாகும். சிவ மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ஆடி   
உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து ரீதியாக அனுகூலப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. பல பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடைய முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.
ஆவணி        
மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் வளமான பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகள் கிட்டும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
புரட்டாசி      
உங்கள் ராசிக்கு வரும் 7-ஆம் தேதி முதல் ராகு 3-ல் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். சூரியன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
ஐப்பசி             
ஜென்ம ராசிக்கு ராகு 3-ல், 11-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றியை பெற முடியும். சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி இடையே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளிகள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
கார்த்திகை                
மாத கோளான சூரியன் 9-ல் சஞ்சரிப்பதும், வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானத்தில் சனி சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் வாழ்வில் நல்லதொரு முன்னேற்றத்தை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் குறையும். மகாலட்சுமி வழிபாடு மேன்மையை அளிக்கும்.
மார்கழி         
இம்மாதம் ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய நல்ல அமைப்பும் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். விநாயகர் மற்றும் முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
தை                    
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, சனி, சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீடு மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். விநாயகர் வழிபாடு தொடர்ந்து செய்வது நல்லது.
மாசி                  
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வரும் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய்- ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் பெரிய பாதிப்புகள் உண்டாக்காது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும்.  கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். முருக கடவுளை வழிபடுவது நல்லது.
பங்குனி
உங்கள் ராசியதிபதி குரு, சனி சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதும் 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். சிவ மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          கிழமை - வியாழன், ஞாயிறு  திசை - வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம்    நிறம் - மஞ்சள், சிவப்பு      தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: