Wednesday, April 8, 2020

சிம்மம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021

சிம்மம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த சார்வரி ஆண்டில் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சர்ப்ப கிரகமான ராகு வரும் புரட்டாசி 7 (23-09-2020) முடிய லாப ஸ்தானமான 11-ல் சஞசரிப்பதும் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்பை உண்டாக்கும். உங்களது உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். கடந்த கால தேவையற்ற வீண் செலவுகள் முற்றிலும் விலகி சேமிக்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் வியாபார ரீதியாக மேன்மை மிகுந்த பலன்களும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கைகூடும் வாய்ப்புகள் வருகின்ற நாட்களில் நடக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த கால பிரச்சினைகள் விலகி படிப்படியான உயர்வுகளும் கௌரவ பதவிகளும் தேடி வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இனையும் வாய்ப்பு உண்டாகும்
குரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) பஞ்சம ஸ்தானமாகிய 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெற முடியும். சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். அனைத்து கடன்களும் குறையும்.
குரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும், அதன் பின்பு கார்த்திகை 5-ஆம் தேதி (20-11-2020) முதல் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. எது எப்படி இருந்தாலும் சனி ஆண்டு முழுவதும் 6-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். ஆண்டின் முற்பாதியில் ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.
குடும்பம் பொருளாதாரம்
சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்னோன்னியம் நிலவும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடைய முடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெற முடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்க கூடிய யோகங்கள் உண்டாகும். பணிபுரியக் கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
சனி சாதகமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும், கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். குரு பகவான் வரும் 30-06-2020 முதல் 20-11-2020 வரை 5-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முன்னேற்றங்களை எளிதில் அடைய முடியும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி 6-ல் ஆட்சி பெற்று பலமாக சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகம் ஏற்படும்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும், புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக் சேர்ப்பீர்கள்.
மாணவ- மாணவியர்
மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கும் உங்களால் பெருமை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச் செல்வீர்கள்.

மாதப்பலன்
சித்திரை       
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உங்களின் சிறந்த அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். விஷ்ணு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
வைகாசி 
உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார மேம்பாடுகளால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மனநிம்மதியுடன் இருப்பார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
ஆனி                
உங்கள் ராசியதிபதி சூரியன், புதன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றியும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் எளிதில் அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனை பெற முடியும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலனை அடைவீர்கள். விநாயகர் மற்றும் முருக வழிபாடு நல்லது.
ஆடி                   
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 10-ல் சுக்கிரன், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் வரவுகள் தாராளமாக அமையும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.
ஆவணி        
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரித்தாலும், மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன்- ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் நவீன பொருட்கள் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
புரட்டாசி      
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் பணபுழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மணை வாங்கும் எண்ணம் நிறைவேறும். சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண் வாக்குவாதங்கள் உண்டாகும். முடிந்த வரை  நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவு கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். சிவ வழிபாடு அஷ்டலட்சுமி வழிபாடு உத்தமம்.
ஐப்பசி             
இம்மாதம் உங்களுக்கு ராசியதிபதி சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிட்டும். முருக மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
கார்த்திகை                
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் சனி 6-ல் இருப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
மார்கழி         
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் 6-ல் சனி சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து கடந்த கால பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்செவ்வாய்க்கிழமை தோறும் முருக கடவுளை வழிபடுவது நல்லது.
தை                    
உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய மாதமாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றலை பெறுவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
மாசி                  
உங்கள் ராசியதிபதி சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலை நன்றாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறும் ஆற்றல் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடன்கள் பைசல் ஆகும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தி மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
பங்குனி
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இம்மாதம் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தூர பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மகாலட்சுமி தேவியை வழிபடவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                      நிறம் - வெள்ளை, சிவப்பு                 கிழமை - ஞாயிறு, திங்கள்
கல்மாணிக்கம்                    திசை - கிழக்கு                          தெய்வம் - சிவன்

No comments: