Thursday, December 19, 2019

Today rasi palan - 20.12.2019


Today rasi palan - 20.12.2019
இன்றைய ராசிப்பலன் - 20.12.2019   
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
20-12-2019, மார்கழி 04, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 09.09 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் இரவு 09.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   




ராகு

திருக்கணித கிரக நிலை
20.12.2019

  சுக்கி

சனி கேது குரு சூரிய
புதன்
செவ்
சந்தி

இன்றைய ராசிப்பலன் -  20.12.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்களின் சந்திப்பு நற்பலனை அளிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
கடகம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துகளை ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. வெளிப் பயணங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.


No comments: