Thursday, December 26, 2019

வார ராசிப்பலன் - டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை


வார ராசிப்பலன் - டிசம்பர்  29 முதல் ஜனவரி 4 வரை 
மார்கழி 13 முதல் 19 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,





ராகு

திருக்கணித கிரக நிலை


  சுக்கி
சந்தி

சனி கேது குரு சூரிய
புதன்

செவ்




கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மகரம்       27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.
கும்பம்      30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.
மீனம்       01-01-2020 இரவு 09.40 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை.
மேஷம்     04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
29.12.2019 மார்கழி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

30.12.2019 மார்கழி 14 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

02.01.2020 மார்கழி 17 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.  
தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு, புதன் சஞ்சரிப்பதும் 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். முருக வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1, 2.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி, சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருந்தால் அனுகூலப் பலனை அடையலாம். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்களும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நவகிரகங்களில் உள்ள ராகுவிற்கு மந்தாரை மலர்களாலும் சனிக்கு சங்கு மலர்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1, 2, 3.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், குரு சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்பதால் எந்த சிக்கலையும் சமாளித்து வலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழிலை விரிவாக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்ததை விட லாபங்கள் சிறப்பாக அமையும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தாராள தன வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின் நடைபெறும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக உயர்வும், தடைப்பட்ட ஊதிய உயர்வும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். மகாலட்சுமி தேவிக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 4.
சந்திராஷ்டமம் -   27-12-2019 இரவு 11.45 மணி முதல் 30-12-2019 காலை 09.35 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்தவொரு செயலிலும் துணிந்த பின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டு பிடி போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவுகளால் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்த கால கடன்களும் குறையும். சஷ்டியன்று முருக வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 4.
சந்திராஷ்டமம் -   30-12-2019 காலை 09.35 மணி முதல் 01-01-2020 இரவு 09.40 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு, புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கடந்த கால நெருக்கடிகள் விலகி மனநிம்மதி ஏற்படும் அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவில் இருந்த தேக்கங்கள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் விருப்பம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலைபளுவை குறைத்துக் கொள்ளலாம். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். விநாயகரையும் முருக கடவுளையும் வணங்கி வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 30, 31, 1.
சந்திராஷ்டமம் -   01-01-2020 இரவு 09.40 மணி முதல் 04-01-2020 காலை 10.05 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பது வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்றாலும் 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள பிரச்சினைகள் விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது மூலம் ஒரு சில ஆதாயங்களை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. நம்பியவர்களாலேயே ஏமாறும் சூழ்நிலை உருவாகலாம். உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திக்க நேரிடும். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிட்டும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1, 2, 3.
சந்திராஷ்டமம் -   04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அடைவீர்கள். கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். சஷ்டியன்று முருக வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  2, 3, 4.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குரு புதன் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி கோபத்தைக் குறைத்துக் கொண்டு, விட்டு கொடுத்து சென்றால் தான் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. கொடுத்த கடன்களை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் பெருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிம்மதியான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 4.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி நடந்து கொள்ளும் பண்பு கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். பணவரவுகள் ஒரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிதானமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் காணப்படும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபகரமான பலன்கள் உண்டாகும். 12-ல் சூரியன், சனி, குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  29, 2, 3.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன், கேது, குரு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வலமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். ஆரோக்கிய பாதிப்புகளும் படிப்படியாக குறைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்கள் குறையும். சிலரின் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத வகையில் உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். துர்கையம்மனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  30, 31, 1.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான பணவரவுகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு ராகு 4-ல், சனி, குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் அதிக முதலீடு கொண்ட செயல்களில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கொடுத்து கடன்களை பெறுவதில் கவனம் தேவை. சனி பகவானை வழிபடுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  29, 2, 3.





No comments: