மகரம் புத்தாண்டு பலன் - 2020
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால
முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in
Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell:
0091 7200163001. 9383763001,
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும்
தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே.
சனியின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குருபகவான்
திருக்கணிதப்படி 20-11-2020 முடிய விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று
சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல்
ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய
காலமாகும். ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பது உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி
என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதலை செய்ய மாட்டார். உடல்
ஆரோக்கிய ரீதியாக சோர்வு, சுறுசுறுப்பு இல்லாத நிலை இருக்கும் என்பதால்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது
நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபாடு அற்ற நிலை இருக்கும் என்பதால் முடிந்த வரை அதிக
பெறுப்புகளை எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக
இருக்கும் நிலை, வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் சர்ப்ப கிரகமான
ராகு ருணரோக ஸ்தானமான 6-ல் வரும் 23-09-2020 வரை சாதகமாக சஞ்சாரிப்பதாலும் அதன்
பின்பு கேது 11-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து
தேவைகளும் பூர்த்தி ஆகும். உற்றார் உறவினர்களாலும், குடும்பத்தில் உள்ளவர்களாலும்
சிறுசிறு உதவிகள் கிடைப்பதால் ஒரளவுக்கு மன நிம்மதி உண்டாகும்
பொருளாதார
ரீதியாக நெருக்கடிகள் நிலவும், கொடுக்கல்- வாங்கல் விஷத்தில் கவனத்துடன் இருப்பது
மற்றவர்களுக்கு பண உதவி செய்வது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் மிகவும்
எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக கடுமையாக உழைக்க
வேண்டிய காலமாகும். தேவையற்ற பொருட் தேக்கத்தால் அடைய வேண்டிய லாபத்தை அடைய
இடையூறு உண்டாகும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும்
என்பதால் எதிலும் பெறுமையுடன் செயல்படுவது நல்லது. ராகு சாதகமாக இருப்பதால்
எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். தொழில் ரீதியாக அதிக முதலீடு கொண்ட செயல்களை
தள்ளி வைப்பது மிகவும் நல்லது. அப்படி ஈடுபட்டே ஆக வேண்டும் என்றால் உங்கள்
பெயரில் செய்யாமல் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது உத்தமம்.
உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்
பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையீடாமல் இருப்பது
நல்லது. ஆரோக்கிய பாதிப்பால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய நிலை உண்டாகும்.
திருமண போன்ற சுப காரியங்களுக்கான முயற்சியில் தடைகள் ஏற்படும் என்றாலும் ஏப்ரல்
மே மாதங்களில் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
உடல் ஆரோக்கியம்
ஆரோக்கிய பாதிப்பால் உடல் சோர்வு
ஏற்படும் என்றாலும் உங்களது மனோ தைரியத்தால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக
செயல்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில்
உள்ளவர்களால் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை
தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதார ரீதியாக நெருக்கடி தேவையற்ற
பிரச்சினையால் எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் உண்டாகும் என்பதால் எதிலும்
நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் உங்களது அனைத்து
பிரச்சினைகளும் குறையும். ஏப்ரல் மே மாதங்களில் திருமண சுப காரிய முயற்சிகளில்
இருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உத்தியோகம்
மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைபளு
போன்றவைகளால் பல சங்கடங்களை சந்தித்தாலும் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்க இடையூறுகள் உண்டாகும் என்பதால்
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். ஊதிய உயர்வுகள் தக்க சமயத்தில்
கிடைக்கும் என்றாலும் குடும்பத்தில் ஏற்படும் வீண் செலவுகளால் தேவையற்ற நெருக்கடி
உண்டாகி மன நிம்மதி குறையும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய
போட்டி பொறாமைகள், அலைச்சல் டென்ஷன் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம்
பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன்
செயல்படுவது நல்லது. புதிய நவீன கருவிகள் வாங்குவதற்காக கடன் வாங்க நேரிடும்.
கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றங்களை அடைவீர்கள். வெளியூர் வெளிநாட்டு
தொடர்புகளால் சாதகமான பலன் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளில் இழுபறி நிலை தேவையற்ற
இடையூறுகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி
வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
நெருங்கியவர்களின் உதவியால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து எதையும் சமாளிக்கும்
சூழ்நிலை உண்டாகும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
அரசியல்
கட்சி பணிக்காக நிறைய செலவு செய்ய
வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை
கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத உதவிகளால் பொருளாதார நிலையில் மேம்பாடுகள்
உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும் என்றாலும் வேலையாட்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது உத்தமம்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை
பயன்படுத்தி கொண்டு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மன அமைதியை
குறைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சற்று
இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற
துறைகளில் இருப்பவர்களுக்கும் அனுகூலங்கள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய
பாடுபட வேண்டி இருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர் வரத்து குறையும்
என்றாலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். பூமி, மனை, வண்டி,
வாகனம் வாங்க கூடிய யோகம் ஏற்படும் என்றாலும் அதற்காக கடன் வாங்கும் சூழ்நிலை
உண்டாகும். அரசு வழியில் கிடைக்கும் உதவியால் இருக்கும் நெருக்கடிகள் சற்று
குறையும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு
பாதிப்புகள் தோன்றும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. உற்றார்
உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம்
பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரல் மே
மாதங்களில் நல்ல வரன்கள் தேடி வரும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள்
உண்டாகும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட
வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை
எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற
நட்புக்களால் வீண் பழிச் சொற்கள் உண்டாகும் என்பதால் எச்சிரிக்கையுடன் செயல்படுவது
நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.
மாதப்பலன்
ஜனவரி.
உங்கள் ராசிக்கு ராகு 6-ல், செவ்வாய் 11-ல்
சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். தொழில் பொருளாதார
நிலை சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்
சுபிட்சமும் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள்
ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில்
கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். சிவ வழிபாடு செய்வது
உத்தமம்.
சந்திராஷ்டமம் - 13-01-2020 காலை 09.55 மணி முதல் 15-01-2020
காலை 11.28 மணி வரை.
பிப்ரவரி.
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு,
கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடனும், கவனமுடனும் செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும்.
எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பண வரவுகளில் பற்றாகுறை ஏற்படும். ராகு
6-ல் இருப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம்
உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று
சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால்
அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 09-02-2020 இரவு 07.43 மணி முதல் 11-02-2020
இரவு 07.43 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4-ல், ராகு 6-ல்
சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான
அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்தவித பிரச்சினைகளையும்
சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்
சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில்
விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக
எதிர்ப்புகள் மறையும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவிஷயத்தில் கவனமாக
செயல்பட்டால் ஏற்றமிகுந்த பலன்களை அடையலாம். முருக வழிபாடும் விநாயக வழிபாடும்
செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 08-03-2020 காலை 06.52 மணி முதல் 10-03-2020
காலை 06.22 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 5-ல், ராகு 6-ல்
சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரக்கூடிய
நல்ல அமைப்பாகும். உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். பொருளாதார
நிலையும் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவிருத்தியும்
பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். முருக வழிபாடு செய்வது
உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-04-2020 மாலை 05.08 மணி முதல் 06-04-2020
மாலை 05.32 மணி வரை.
மே.
உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய்,
சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு
நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல்கள், ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு
பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்ய கடன்
வாங்க நேரிடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.
பண விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்
செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 02-05-2020 அதிகாலை 01.05 மணி முதல் 04-05-2020
அதிகாலை 03.08 மணி வரை மற்றும் 29-05-2020 காலை 06.59 மணி முதல் 31-05-2020 காலை
10.20 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் பஞ்சம
ஸ்தானமான 5-லும், ராகு 6-லும் சஞ்சரிப்பது மட்டுமின்றி இம்மாத பிற்பாதியில் 3-ல்
செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி
பெறுவீர்கள். தடைபட்ட சுபகாரியங்கள் கூட கைகூடும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்-
வாங்கலில் திருப்திகரமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும்
உண்டாகும். பொன், பொருள் ஆடை, ஆபரண சேர்க்கைகள் யாவும் அமையும். சிலருக்கு வீடு,
மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நினைவாகும். தொழில் உத்தியோகம் செய்பவர் எதிலும்
சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியையும் முருக
கடவுளையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 25-06-2020 பகல் 12.25 மணி முதல் 27-06-2020
மாலை 03.50 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு செவ்வாய் 3-லும்,
சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம்
உண்டாகும். மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள்
குறைந்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள்
ஒரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா
சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த
நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்து கெடுபிடிகள் விலகும்.
விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் - 22-07-2020 இரவு 07.15 மணி முதல் 24-07-2020
இரவு 09.35 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில்
செவ்வாய் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் இருக்கும் என்றாலும்
சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது
நல்லது. பொருளாதார நிலையானது ஒரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்
விஷயங்களில் சற்றுக் கவனமுடன் இருந்தால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். முடிந்த வரை
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து
நடக்கப் பழகிக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. சிவ வழிபாடு
செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 19-08-2020 அதிகாலை 04.10 மணி முதல் 21-08-2020
அதிகாலை 05.15 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், மாத
முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய
காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை
உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட
வேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள்
அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவபெருமானையும்
முருகரையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 15-09-2020 பகல் 02.25 மணி முதல் 17-09-2020
பகல் 03.08 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேது,
10-ல் புதன், மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள
நெருக்கடிகள் குறைந்து சாதகமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின்
ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்
ஒரளவுக்கு குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களை
சிறப்புடன் முடிக்க முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெற முடியும். பண
விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். முருக பெருமானை
வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 12-10-2020 பின்இரவு 12.30 மணி முதல்
15-10-2020 அதிகாலை 02.03 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல்
செவ்வாய் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல்
சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக
ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று திருப்தியான நிலை இருக்கும். குடும்பத்தில்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்
மூலம் அனுகூலமான பலன்களை அடைய முடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.
கடன்கள் படிப்படியாக குறையும். மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 09-11-2020 காலை 08.43 மணி முதல் 11-11-2020
பகல் 12.00 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல்
செவ்வாய், 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள்.
சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள்
எளிதில் கைகூடும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி
குடும்பத்தில் நிம்மதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள்,
இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில்
திருப்திகரமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.
துர்கையம்மன் வழிபாடு நன்மைகளை தரும்.
சந்திராஷ்டமம் - 06-12-2020 பகல் 02.45 மணி முதல் 08-12-2020
இரவு 07.30 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் -
5,6,8 நிறம் - நீலம், பச்சை கிழமை - சனி, புதன்
கல்
- நீலக்கல் திசை - மேற்கு தெய்வம்
- விநாயகர்
No comments:
Post a Comment