மிதுனம் - புத்தாண்டு பலன் - 2020
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால
முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in
Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.
வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell:
0091 7200163001. 9383763001,
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும்,
சமூக பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! வரும் 2020-ம் ஆண்டில் ஆண்டு
கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய சமசப்தம
ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில்
சுபிட்சம், பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய
வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
சுபகாரியங்கள் கைகூடி மன மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம்
அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய அமைப்பு
உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடி வரும் நிலைமை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்
சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை
அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும்
மகிழ்ச்சியும் உண்டாகும்.
திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல்
சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரித்து உங்களுக்கு அஷ்டமச்சனி நடக்க இருப்பதால் உடல்
ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும்-. தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல் போகும். வண்டி வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்
போது நிதானமாக செல்வது, முடிந்த வரை இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசியிலும்
கேது 7-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இடையே
தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் மேலோங்கும். ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட
வீண் சண்டை ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானமாக
இருப்பது நல்லது. குறிப்பாக மனைவி (கணவன்) வழி உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகள்
ஏற்படும் காலம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள்
கூட்டாளிகளையும் வேலையாட்களையும் அனுசரித்து செல்வது நல்லது.
உடல் ஆரோக்கியம்
குரு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினை
பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத
பயணங்களால் சாதகமானப் பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு
பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வது
நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில்
உள்ளவர்களால் தேவையற்ற மன கவலை உண்டாகும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் தாராளமாக இருப்பதால்
சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடந்த கால
கடன்கள் குறையும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு வீடு மனை வாங்கும்
யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் வந்து சேரும்.
உறவினர்களால் தேவையற்ற நிம்மதி குறைவு உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது
நல்லது.
உத்தியோகம்
உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும்
அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.
உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். உத்தியோக
ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலன்கள் கிடைக்கும். சிறு சிறு
ஆரோக்கிய பாதிப்பால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால்
முடிந்த வரை சக ஊழியர்களை அனுசரித்து செல்வது பெறுப்புகளை குறைத்து கொள்வது
நல்லது.
தொழில் வியாபாரம்
எடுக்கும் முயற்சியில் முனைப்புடன்
செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். வேலையாட்களால் சில இடையூறுகள் நிலவினாலும் எதையும்
சமாளித்து லாபங்களை அடைவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும்
வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். கூட்டாக
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு
வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில்
இருப்பதால் பண புழக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும்
நற்பலனை உண்டாக்கும். காண்டிராக்ட் கமிஷன் ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம்
அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தை பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள்
குறைந்து ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள்.
அரசியல்
எதிர்பாராத கௌரவ பதவிகள் தேடி வரும்.
கட்சி பணிகளுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உணவு விஷயத்தில்
சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து
உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளை
பெறுவீர்கள். மக்களின் ஆதரவைப் பெற புதுபுது முயற்சிகளை கையாள்வீர்கள்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதநிலை
ஏற்பட்டாலும் போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும்.
வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்து சேரும். நடிப்பு துறையில் உள்ளவர்கள்
மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள்
கிடைக்கப் பெற்று நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை
எடுத்து கொள்வது நல்லது.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக
இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று குறைந்து லாபகரமான பலனை அடைவீர்கள்.
அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். புதிய பூமி மனை வாங்கும்
வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் செயல்கள் உங்கள் மன அமைதியை குறைக்கும்.
பங்காளிகளிடம் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.
பெண்கள்
பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்ப
தேவைகள் எல்லா பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்க முடியும். நவீன
பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பெருமை
அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில்
சிறுசிறு நிம்மதி குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு
அதிக மதிப்பினை பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக
இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை
தேர்ந்தெடுத்து படிக்க முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று
கவனமாக இருப்பது நல்லது.
மாதப்பலன்
ஜனவரி.
உங்கள் ராசியதிபதி புதன் குரு
சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழில்
வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும்
உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி
கிட்டும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது
நற்பலனை தரும். தாராள தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக்
கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால்
மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020
மாலை 05.39 மணி வரை.
பிப்ரவரி.
உங்கள் ராசியதிபதி புதன் பாக்கிய
ஸ்தானத்தில் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும்
சிறப்பான அமைப்பு என்பதால் தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி
தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால்
ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உறவினர்களிடம் சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றி மறையும். பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்-
வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில்
எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 20-02-2020 பகல் 01.52 மணி முதல் 23-02-2020
அதிகாலை 00.29 மணி வரை.
மார்ச்.
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 11-ல்
சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில்
வெற்றி, பொருளாதார ரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. மாத
பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சரிப்பது அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர்
வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 18-03-2020 இரவு 07.25 மணி முதல் 21-03-2020
காலை 06.20 மணி வரை.
ஏப்ரல்.
மாத கோளான சூரியன் இம்மாதம் 10, 11-ல்
சஞ்சரிப்பது தொழில் வியாபார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த
எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகளில்
எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் குரு, செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர
செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள்
கிடைக்கும். தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 15-04-2020 அதிகாலை 01.57 மணி முதல் 17-04-2020
பகல் 12.17 மணி வரை.
மே.
மாத முற்பாதியில் சூரியன், புதன் லாப
ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும்
முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள்
அனைத்தும் படிப்படியாக குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள்
பூர்த்தியாகும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, கொடுக்கல்-
வாங்கலில் கவனமுடன் செயல்படுவது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு
பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள்
விலகி பதவி உயர்வுகள் கிட்டும். பயணங்களால் சாதகமானப் பலன்கள் அமையும். முருக
பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 12-05-2020 காலை 10.16 மணி முதல் 14-05-2020
இரவு 07.20 மணி வரை.
ஜுன்.
சூரியன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதும்
குரு 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன்
நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். பண
வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பர
செலவுகளை குறைப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை
அனுசரித்து செல்வது நல்லது. மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் - 08-06-2020 இரவு 07.45 மணி முதல் 11-06-2020
அதிகாலை 03.40 மணி வரை.
ஜுலை.
செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது
மதிப்பு மரியாதை மேலோங்கும். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருளாதார
நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும்
விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில்
நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றி மறையும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால்
முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 06-07-2020 அதிகாலை 05.00 மணி முதல் 08-07-2020
பகல் 12.30 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய்
சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் உன்னதமான
அமைப்பாகும். உங்களது பலமும் வளமும் கூடும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு
தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய
நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்த்து
விடுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். துர்க்கையம்மனை
வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 02-08-2020 பகல் 12.55 மணி முதல் 04-08-2020
இரவு 08.45 மணி வரை மற்றும் 29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை
03.49 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில்
செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பு
என்பதால் வலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
பணவரவுகள் சரளமாக அமைந்து நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த
நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய
மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன்
செயல்பட்டால் லாபகரமான பலன்களை அடையலாம். விஷ்ணு வழிபாடு செய்வது நற்பலனை
உண்டாக்கும்.
சந்திராஷ்டமம் - 26-09-2020 அதிகாலை 00.40 மணி முதல் 28-09-2020
காலை 09.40 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசியதிபதி புதன் 5-லும், குரு 7-லும்,
செவ்வாய் 10, 11-லும் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், மங்களகரமான சுபகாரியங்கள்
கைகூடும் நிலை உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம் செல்வாக்கு
உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய
நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில்
சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற
பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவ பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 23-10-2020 காலை 07.00 மணி முதல் 25-10-2020
மாலை 03.25 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசியதிபதி புதன் 5-ல், செவ்வாய்
10-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா
வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி
கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும்
சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த
பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும்
கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள்
வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக ரீதியாக பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
விஷ்ணு வழிபாடும் முருக வழிபாடும் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 19-11-2020 பகல் 03.30 மணி முதல் 21-11-2020
இரவு 10.25 மணி வரை.
டிசம்பர்.
மாத முற்பாதியில் சூரியன் 6-ல்
சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நல்ல
பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை
நிறைந்திருக்கும். பணவரவுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் கிடைக்கும்.
குரு 8-ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய
தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் நினைத்த
காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்
அதிகரித்தாலும் அடைய வேண்டிய முன்னேற்றங்களை அடைந்து விடுவீர்கள். அம்மன் வழிபாடு
செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 17-12-2020 அதிகாலை 01.48 மணி முதல் 19-12-2020
காலை 07.15 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8, நிறம் - பச்சை,
வெள்ளை, கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம் திசை -
வடக்கு தெய்வம் - விஷ்ணு
No comments:
Post a Comment