வார ராசிப்பலன் - டிசம்பர் 22
முதல் 28 வரை
மார்கழி 6 முதல் 12 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில்
தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு,
இந்தியா.
cell: 0091 7200163001.
9383763001,
ராகு
|
|||
திருக்கணித கிரக நிலை
|
|||
சுக்கி
|
|||
சனி கேது குரு சூரிய
|
புதன்
|
செவ்
சந்தி
|
கிரக மாற்றம்
25-12-2019 தனுசில் புதன் மாலை
03.46 மணிக்கு
25-12-2019 விருச்சிகத்தில்
செவ்வாய் இரவு 09.29 மணிக்கு
இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
துலாம் 21-12-2019 காலை 08.25
மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.
விருச்சிகம் 23-12-2019
பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.
தனுசு 25-12-2019 மாலை 04.40 மணி முதல் 27-12-2019
இரவு 11.45 மணி வரை.
இவ்வார சுப முகூர்த்த நாட்கள் இல்லை
மேஷம் அசுவனி, பரணி,
கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி
எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே,
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, கேது சஞ்சரிப்பதும், 10-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். உங்களுடைய
செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய
நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உங்கள்
ராசிக்கு செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்
கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக
இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் சற்று குறையும். கணவன்-- மனைவி ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள்
செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத்
தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். ஏகாதசி அன்று விஷ்ணு
ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வழிபட்டால்
குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 28.
சந்திராஷ்டமம் - 23-12-2019
பகல் 11.50 மணி முதல் 25-12-2019 மாலை 04.40 மணி வரை.
ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம்
பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில்
தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக
இருந்தாலும் ஆறு கிரக சேர்க்கை இவ்வாரத்தில் 8-ல் ஏற்பட இருப்பதால் தேவையற்ற
நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு, நெருங்கியவர்களிடம் கருத்து
வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை மற்றவர்களை அனுசரித்து செல்வது, பிறர்
விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள்
அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் அடிக்கடி
பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில்
கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட
கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். சிலருக்கு அசையும்
அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன்
மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய
லாபத்தை அடைவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட
முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்பட்டாலும் வேலைபளு சற்று
குறையும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23,
24.
சந்திராஷ்டமம் - 25-12-2019
மாலை 04.40 மணி முதல் 27-12-2019 இரவு 11.45 மணி வரை.
மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்
1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்
சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி
நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக
இருக்கும் என்றாலும் சூரியன், சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி இடையே
விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார்
உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்
ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக்
கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்
பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை
அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும்
உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி
பொறாமைகள் அதிகரித்தாலும் வரும் 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க
இருப்பதால் மறைமுக பிரச்சினைகள் விலகி அனுகூலங்களை அடைவீர்கள். வர வேண்டிய
வாய்ப்புகளும் வந்து சேரும். எதிர்பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். மகாலட்சுமி
வழிபாட்டை மேற்கொண்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25,
26, 27.
கடகம் புனர்பூசம் 4-ஆம்
பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர
ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக
ஸ்தானமான 6-ல் சூரியன், சனி, கேது சஞ்சரிப்பதும் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சகல
விதத்திலும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல
வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி
உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய
வாய்ப்புகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்.
கணவன்-மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து
முடிப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.
சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு
வரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். முருக வழிபாடும் அம்மன்
வழிபாடும் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27,
28.
சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே
அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள்
ராசிக்கு 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக
இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள்
ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில்
சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள்.
கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு
மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்
மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்-வாங்கல்
திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனமாக
இருப்பது நல்லது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான
உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவதாலும்
சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதாலும் நற்பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 28.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம்
பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக
பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன்,
சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும்.
நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது, தேவையற்ற
பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின்
உதவியால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள்
கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப்
பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய
விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு வாகனம் வாங்கும் எண்ணம் சிறு தடை
தாமதத்திற்கு பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பெரிய
தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை
தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும்.
கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை
பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன்
செயல்படுவது நல்லது. முருக வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலன்களை அடையலாம். சிவ
வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 23, 24,
25.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம்
பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்த
வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி
சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சனி, கேது
சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய சிறப்பான அமைப்பாகும். நீங்கள்
நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நவீனகரமான பொருட்களை
வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில்
சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் தடைகள் விலகி கைகூடும்.
சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய
வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவியிடையே
ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம்
செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள்
ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் இருந்த தடைகள் விலகும்.
கொடுத்த கடன் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு
அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு நெய்
தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 25,
26, 27.
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
வசீகர தோற்றமும், உறுதியான
பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, தன ஸ்தானமான 2-ல் குரு
சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பணப்புழக்கம்
சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளும் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள்
குறையும். எந்த சிக்கலையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். அசையும் அசையா
சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறு சிறு விரயங்களை
தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் சிறு
சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, சூரியன், கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி
பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துவ செலவுகள்
உண்டாகாது. கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற
முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும்.
கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலாளர்களின்
ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். சிவ வழிபாடும்,
சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 23, 24,
25, 28.
தனுசு மூலம், பூராடம்,
உத்திராடம் 1-ஆம் பாதம்.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும்
தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு
ஜென்ம ராசியில் சனி, கேது, குரு, சூரியன் சஞ்சரிப்பதும் இவ்வாரத்தில் ஆறு
கிரகங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கும்
அமைப்பாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு
பிரச்சினைகள், உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு ஏற்படலாம். விட்டு கொடுத்து
செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள
நேரிடும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண்
பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு
முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கொடுக்கல்-வாங்கலில்
பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த
லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.
வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். அனுமந்த ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபட்டால்
நற்பலன்கள் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வதும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 22, 26,
27.
மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம்
பாதங்கள்.
எல்லோருக்குமே மரியாதை
கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர
ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால்
நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வந்து வலமான பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களின்
உதவி சிறப்பாக கிடைக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள்
பூர்த்தியாகும். சூரியன், சனி, குரு, கேது 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய
வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண சுப
காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க
முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது
உத்தமம். குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள்
ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம்
தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும்.
கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில்
இருப்பவர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன
மகிழ்ச்சி உண்டாகும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நல்லது பல
நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 22, 23,
24, 28.
கும்பம் அவிட்டம் 3,4-ஆம்
பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக்
கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை
பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான
11-ல் சூரியன், சனி, கேது, குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக மேன்மை, சிறப்பான
பணவரவு, இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை
உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்-மனைவியிடையே
அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்
பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால்
குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம்
போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் குறைந்த
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு
கரம் நீட்டும். கொடுக்கல்-வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை
காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின்
ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும்
இடமாற்றங்களும் கிடைக்கும். அம்மன் வழிபாடு முருக வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 24, 25,
26, 27.
மீனம் பூரட்டாதி 4-ஆம்
பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
அன்பும் சாந்தமும் அமைதியான
தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல்
கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன்
சஞ்சரிப்பதால் இருக்கும் நெருக்கடிகள் ஓரளவுக்கு விலகி அனுகூலங்களை
அடைவீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும்
பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். வரும் 25-ஆம் தேதி
முதல் செவ்வாய் 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் தற்போது இருக்ககூடிய ஆரோக்கிய
பிரச்சினைகள் விலகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொளாதார நிலை மேலோங்கும்.
செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம்.
சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன்
உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை
தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும்
சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள்
கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளை
தடையின்றி பெறுவார்கள். பார்வதி தேவிக்கு செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்து
வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 26, 27,
28.
சந்திராஷ்டமம் - 21-12-2019
காலை 08.25 மணி முதல் 23-12-2019 பகல் 11.50 மணி வரை.
No comments:
Post a Comment