Saturday, December 21, 2019

கன்னி - புத்தாண்டு பலன் - 2020

கன்னி - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2020-ஆம் ஆண்டில் நவகிரகங்களில் தேவகுரு எனவும் பொன்னவன் எனவும் போற்றப்படும் ஆண்டு கோளான குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 10-லும், கேது 4-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் பண வரவுகள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க வீண் இடையூறுகள் உண்டாகும். வேலைபளு காரணமாக நேரத்திற்கு உணவு உன்ன முடியாத அளவிற்கு இடையூறு உண்டாகும். வண்டி வாகனங்கள் மூலமும், வீடுகளை பழது பார்ப்பதற்காகவும் செலவுகள் செய்ய நேரிடும்.
ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் பஞ்சம ஸ்தானமான 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெற்று உங்களது பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும் என்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை நிலவும், மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைபளு அதிகப்படியாக இருக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு திருப்திகரமாக இருப்பதால் மன அமைதி உண்டாகும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் அதிசாரமாக திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும் அதனை தொடர்ந்து வக்ர கதியில் 12-09-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் 5-ல் (மகர ராசியில்) சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, திருமணம் போன்ற சுப காரியங்கள் எளிதில் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது.
குடும்பம் பொருளாதார நிலை
கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீடு, பூமி, வாகனம் போன்றவற்றால் சிறு சிறு செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
உத்தியோகம்
உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நிலையும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு வெளியூர் செல்லும் சூழ்நிலை உண்டாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் இருக்காது. புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செய்யவும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல்படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அரசியல்
பெயர் புகழ் சுமாராக இருக்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது சாதித்து விடுவீர்கள். வீண் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும்.
கலைஞர்கள்
பணவரவுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன், நேரத்திற்கு உணவு உன்ன முடியாத நிலை ஏற்படும் என்றாலும் அதனால் சாதகபலனும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்கான முழு பலனை அடைய இடையூறு உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.
பெண்கள்
உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் இடையூறு ஏற்பட்டாலும் ஏப்ரல், மே மாதங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் ஞாபக மறதி ஏற்பட்டு படித்ததெல்லாம் தக்க சமயத்தில் ஞாபகத்திற்கு வராமல் போகும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசியதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உடல் அரோக்கியத்தில் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் உண்டாகும். பண விஷயத்தில் யாருக்கும் முன் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 04-01-2020 காலை 10.05 மணி முதல் 06-01-2020 இரவு 08.36 மணி வரை மற்றும் 31-01-2020 இரவு 06.09 மணி முதல் 03-02-2020 அதிகாலை 05.40 மணி வரை.
பிப்ரவரி. 
ளுங்கள் ராசிக்கு குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 28-02-2020 பின்இரவு 01.08 மணி முதல் 01-03-2020 பகல் 01.18 மணி வரை.
மார்ச்.
மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். செவ்வாய், குரு 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
சந்திராஷ்டமம் - 26-03-2020 காலை 07.16 மணி முதல் 28-03-2020 இரவு 07.30 மணி வரை.
ஏப்ரல்.
குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதும் தாராள தனவரவை உண்டாக்கும் அமைப்பாகும். சுபகாரியங்கள் கைகூட கூடிய வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்து காத்திருந்த நல்லசெய்தி ஒன்று கிடைக்கப் பெற்று மனநிறைவு தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் லாபங்களும் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் - 22-04-2020 பகல் 01.18 மணி முதல் 25-04-2020 பின்இரவு 01.15 மணி வரை.
மே.
குரு அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும், வரும் 4-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். நெருங்கியவர்கள் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் ஒரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் நன்றாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 19-05-2020 இரவு 07.54 மணி முதல் 22-05-2020 காலை 07.35 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், ராசியதிபதி புதன் 10-ல் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்தவொரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 16-06-2020 அதிகாலை 03.18 மணி முதல் 18-06-2020 மாலை 03.05 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் தொடர்புகளால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். குரு பகவான் வழிபாடு சுபிட்சத்தை அளிக்கும்.
சந்திராஷ்டமம் - 13-07-2020 பகல் 11.15 மணி முதல் 15-07-2020 இரவு 11.18 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும் சூரியன் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழிலில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 09-08-2020 இரவு 07.05 மணி முதல் 12-08-2020 காலை 07.35 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல், மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது-. குடும்பத்தில் புத்திர வழியில் சில நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 06-09-2020 அதிகாலை 02.20 மணி முதல் 08-09-2020 மாலை 03.10 மணி வரை.
அக்டோபர்.
உங்களுக்கு ஜென்ம ராசியில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரித்தாலும், 2-ல் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களுடைய நெருக்கடிகள் குறையும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் குறையும். சிவ வழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம் - 03-10-2020 காலை 08.50 மணி முதல் 05-10-2020 இரவு 09.40 மணி வரை மற்றும் 30-10-2020 பகல் 02.58 மணி முதல் 02-11-2020 அதிகாலை 03.40 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசியதிபதி புதன் 2-லும், கேது 3-லும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை மேலோங்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலக கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும் வலிமையும் கூடக் கூடிய வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 26-11-2020 இரவு 09.20 மணி முதல் 29-11-2020 காலை 10.02 மணி வரை.
டிசம்பர்.
குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-லும், கேது 3-லும் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் குடும்பத்தில் கைகூடும். மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பாகும். பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். துர்கையம்மனையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது. 
சந்திராஷ்டமம் - 24-12-2020 அதிகாலை 04.33 மணி முதல் 26-12-2020 மாலை 05.17 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,7,8          நிறம் - பச்சை, நீலம் கிழமை - புதன், சனி
கல் -  மரகத பச்சை திசை - வடக்கு       தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: