Wednesday, December 18, 2019

மேஷம் - புத்தாண்டு பலன் - 2020


மேஷம் - புத்தாண்டு பலன் - 2020
கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான குரு பகவான் இந்த 2020-ல் பிரதான காலம் அதாவது 20-11-2020 முடிய பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பலமாகச் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கடந்த கால ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் தெம்புடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சனி 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக எதிலும் கவனமுடன் செயல்படுவது, பெரிய முதலீடு கொண்டு செய்யும் காரியங்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் ஏற்ற மிகுந்த பலன்களை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
திருக்கணிதப்படி சர்ப கிரகமான ராகு 2-லும், கேது 8-லும் வரும் 23-09-2020 முதல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது குடும்பத்தில் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு சாதகமாக சஞ்சரித்தாலும் குரு அதிசாரமாக மகர ராசியில் திருக்கணிதப்படி 30-03-2020 முதல் 14-05-2020 முடியவும், அதன் பின்பு 20-11-2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பொளாதார ரீதியாக சற்று மந்த நிலை, அதிக அலைச்சல் ஏற்படும் என்பதால் இக்காலத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் ஒரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறு சிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு சேமிப்புக் குறையும். உங்களது சுப முயற்சியால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துகளில் செய்யும் முதலீடு காரணமாக பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதி  ஏற்படும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்து செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
உத்தியோகம்
இந்த வருடத்தில் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மற்றவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற பழிச் சொற்களுக்கும் ஆளாக நேரிடும். வேலைபளு அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் மறைமுக எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் செயல்களில் கவனமுடன் செயல்படுவது, கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் லாபகரமான பலனை அடைவீர்கள். வேலையாட்களால் நிம்மதி குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
எதிர்பார்த்த லாபத்தை அடையும் யோகம் இவ்வருடத்தில் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும்.  தக்க சமயத்தில் தாராள தன வரவு உண்டாகி உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்கள் குறையும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும், நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதையும் தவிர்க்கவும்.
அரசியல்
உங்களது செல்வம் செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். தேவையில்லாத அவப் பெயர்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பால் மன அமைதி குறையும். உடன் இருப்பவர்களிடம் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பது நல்லது.
கலைஞர்கள்
உங்களுக்கு அனுகூலப் பலன்கள் ஏற்படும் யோகம் இவ்வருடத்தில் உண்டு. தொழில் போட்டிகளால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். நடிப்பு துறை மட்டுமின்றி பாடல் இசை துறைகளில் உள்ளவர்களுக்கும் சிறப்பான நிலை ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெற முடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் மனச் சஞ்சலங்களும் வீண் செலவுகளும் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த புத்திர பாக்கியம் கிடைக்கும். பெரியோர்களில் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வரவுகள் சாதகமாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் பிரச்சினைகள் ஏற்படும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாதப்பலன்
ஜனவரி.
பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.  குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  கடந்த காலப் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 19-01-2020 மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.
பிப்ரவரி. 
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். செய்யும் தொழில் உத்தியோக நிலையில் முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிலநேரங்களில் உங்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். நினைத்தது நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 15-02-2020 இரவு 11.18 மணி முதல் 18-02-2020 அதிகாலை 05.13 மணி வரை.
மார்ச்.
முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, 9-ல் குரு, மாத முற்பாதியில் 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்கள் அனைத்தும் குறையும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 14-03-2020 காலை 06.41 மணி முதல் 16-03-2020 பகல் 11.12 மணி வரை.
ஏப்ரல்.
செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒருபுறம் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், முடிந்த வரை பேச்சில் நிதானத்தையும் கடைப் பிடிப்பதும் நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். உடனிருப்பவர்களின் ஆதரவுடன் எதையும் சமாளிப்பீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 10-04-2020 மாலை 04.26 மணி முதல் 12-04-2020 இரவு 07.12 மணி வரை.
மே.
ராசியதிபதி செவ்வாய் 4-ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பணவரவுகள் நன்றாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன் இருப்பதால் முன் கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பாராத வகையில் பணவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளைத் ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சிவ பெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10-05-2020 அதிகாலை 05.03 மணி வரை.
ஜுன்.
ராசியதிபதி செவ்வாய் 11-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஓற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஓற்றுமை நிலவும். பண வரவுகள் தேவைக்கேற்ற படி அமைவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-06-2020 பகல் 01.08 மணி முதல் 06-06-2020 பகல் 03.12 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். தொழில் உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.  உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முருகன் வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 01-07-2020 இரவு 08.55 மணி முதல் 03-07-2020 பின்இரவு 12.10 மணி வரை மற்றும் 29-07-2020 அதிகாலை 02.48 மணி முதல் 31-07-2020 காலை 07.05 மணி வரை.
ஆகஸ்ட்.
சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. கொடுத்த வாக்குறுதிகளை ஒரளவுக்கு காப்பாற்றி விட முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் சுப செலவுகள் ஏற்படும். சிவபெருமானையும் முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் - 25-08-2020 காலை 08.15 மணி முதல் 27-08-2020 பகல் 12.38 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களது பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்களை அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்கள் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் நிலை மிக சிறப்பாக இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் - 21-09-2020 பகல் 03.15 மணி முதல் 23-09-2020 மாலை 06.25 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். துர்கையம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 19-10-2020 அதிகாலை 00.45 மணி முதல் 21-10-2020 அதிகாலை 02.13 மணி வரை.
நவம்பர்.
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். நெருங்கியவர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது சிறப்பு. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 15-11-2020 பகல் 11.58 மணி முதல் 17-11-2020 பகல் 12.20 மணி வரை.
டிசம்பர்.
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது, எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க இடையூறு ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 12-12-2020 இரவு 10.40 மணி முதல் 14-12-2020 இரவு 11.25 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,    நிறம் - ஆழ்சிவப்பு          கிழமை - செவ்வாய்
கல் - பவளம்    திசை - தெற்கு        தெய்வம் - முருகன்

No comments: