Thursday, March 1, 2018

வார ராசிப்பலன் - மார்ச் 4 முதல் 10 வரை


வார ராசிப்பலன் - மார்ச் 4 முதல் 10 வரை
மாசி  20 முதல் 26 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சுக்கி புதன்



சூரிய 
திருக்கணித
கிரக நிலை

ராகு
கேது

சனி
  செவ்
குரு    
 சந்தி

கிரக மாற்றம்
07-03-2018 தனுசு செவ்வாய் மாலை 06.27 மணிக்கு
09-03-2018 குரு வக்ரம் ஆரம்பம் காலை 10.03 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி                03-03-2018 அதிகாலை 03.49 மணி முதல் 05-03-2018 காலை 08.13 மணி வரை.
துலாம்               05-03-2018 காலை 08.13 மணி முதல் 07-03-2018 மாலை 04.07 மணி வரை.
விருச்சிகம்     07-03-2018 மாலை 04.07 மணி முதல் 10-03-2018 அதிகாலை 03.23 மணி வரை
தனுசு                  10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.03.2018 மாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் பிரதிபலன் பாராது அவர்களுக்கு உதவும் பண்பு கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் லாப ஸ்தானத்திலும், 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் நல்ல பலன்களை அடைவீர்கள். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் கிடைக்க வேண்டிய அனுகூலம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்           - 4, 5, 6.
சந்திராஷ்டமம் -         07-03-2018 மாலை 04.07 மணி முதல் 10-03-2018 அதிகாலை 03.23 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சிறப்பான அமைப்பாகும். ராகு 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ற வேலை வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதுடன் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். தட்சிணாமூர்த்தியையும் சனிபகவானையும் வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்           - 5, 6, 7, 8, 9.
சந்திராஷ்டமம் -         10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும் கலை, இசைத்துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பது அற்புதமான அமைப்பாகும். தொழில், வியாபார ரீதியாக மேன்மை, புதிய வாய்ப்புகளை அடையும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான உறவு உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு மந்த நிலை தோன்றும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் ஆதரவைப் பெறுவார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள்     - 8, 9, 10.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
தன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தற்போது உள்ள சின்ன சின்ன பிரச்சினைகள் கூட குறைந்து சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றிகளை பெறுவீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்கள், உடன் பிறந்தவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். தாராள தனவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். பூமி மனை வாங்கும் எண்ணங்களும் நிறைவேறும். மாணவர்கள் முயன்று படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ காலங்களில் விரதம் மேற்கொள்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        4, 10.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுபவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் சமசப்தம ஸ்தானமான 7-லும், 4-ல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நிலையிலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். பணவரவு தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் லாபம் குறையாது. கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். முருக கடவுளை வணங்கினால் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        5, 6, 7.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
எவ்வளவு தான் கற்றறிந்து இருந்தாலும் எந்தவித அகம் பாவமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வதும் விநாயகர் துதிகள் படிப்பதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 4, 8, 9.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் பண்பு கொண்டவராகவும் விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நற்பலனைத் தரும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும், பொழுது போக்குகளையும் தவிர்த்தால் படிப்பில் முன்னேறலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள்           - 5, 6, 7, 10.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள் என்றாலும் 4-ல் சூரியன் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். முருக வழிபாடு மற்றும் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        4, 8, 9.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும் சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் சுபிட்சமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி அனுசரித்து சென்றால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். புத்திரர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொண்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பண சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதுடன் வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். வெளியூர் பயணங்களால் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிட்டும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போட்டிகளிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியினைப் பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        4, 5, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ள கபடமற்ற வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறைவு, பணவரவில் இடையூறுகள் இருக்கும் என்பதால் முடிந்தவரை வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் அனுசரித்து நடப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் சிறிய தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும் என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் எதிர்பார்க்கும் லாபங்களை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும். சிவ வழிபாடு செய்வது மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        5, 6, 7, 8, 9.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவுக்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் வரும் 7-ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை இருந்தாலும் அன்றாட பணிகளை செய்ய முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். திங்கட்கிழமை சோம வார விரதம் இருப்பதும், பார்வதி தேவியை வணங்குவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        8, 9, 10.

சந்திராஷ்டமம் -         03-03-2018 அதிகாலை 03.49 மணி முதல் 05-03-2018 காலை 08.13 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி குரு 8-லும் சூரியன் 12-லும் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள், தேவையற்ற மனகுழப்பங்கள் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்காலிகமாக தள்ளி வைப்பது மிகச் சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதும் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவதும் நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு கூடினாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் கல்வி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெங்கடாசலபதியை வணங்குவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்           - 4, 10.
சந்திராஷ்டமம் -         05-03-2018 காலை 08.13 மணி முதல் 07-03-2018 மாலை 04.07 மணி வரை.


No comments: