Wednesday, March 14, 2018

வார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை


வார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை 
பங்குனி 4 முதல்  10 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

சூரிய புதன் சுக்கி சந்தி




திருக்கணித கிரக நிலை
18.03.2018
ராகு
கேது

செவ் சனி
 
குரு(வ)
 

கிரக மாற்றம்
23.03.2018 புதன் வக்ரம் ஆரம்பம் காலை 05.41 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                  17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.
மேஷம்             19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.
ரிஷபம்              22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.
மிதுனம்            24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு வீட்டில் இருப்பதால் எந்த விஷயத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் இவ்வாரம் 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள்  கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -        20, 21, 24.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடவும். முருக வழிபாடு செய்வதும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரனுடன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சம சப்தம ஸ்தானமான 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கும், முருக கடவுளுக்கும் நெய் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 24.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும், நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பலமும் வலிமையும் அதிகரிக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். மேலும் சுக்கிரன், புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வதும், நவகிரஹ வழிபாடு செய்வதும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -        20, 21, 22, 23.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலமாக தக்க சமயத்தில் உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. பரம சிவனையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24.

சந்திராஷ்டமம் - 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் மறையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் 4-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி  இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் வழியிலும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபாடு செய்யவும். சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 24.

சந்திராஷ்டமம் -         19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 20, 21.

சந்திராஷ்டமம் -         22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் கேது, பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        20, 21, 22, 23.

சந்திராஷ்டமம் -         24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். சனி, செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வதும், நவகிரஹங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        22, 23, 24.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல் இருப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 3-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்ற படி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனுக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்தால் நன்மைகள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 24.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி சனி 11-ல் செவ்வாயுடன் இருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -        20, 21.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வணங்குவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -        18, 19, 22, 23.



No comments: