Thursday, March 29, 2018

வார ராசிப்பலன் - ஏப்ரல் 1 முதல் 7 வரை


வார ராசிப்பலன் - ஏப்ரல்  1 முதல் 7 வரை 
பங்குனி 18 முதல் 24 வரை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சூரிய
புதன் (வ)
சுக்கி


               
திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

செவ் சனி 

குரு (வ)
  சந்தி

கிரக மாற்றம் இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கன்னி              30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.
துலாம்            01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை.
விருச்சிகம்                04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.
தனுசு               06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
04.04.2018 பங்குனி 21 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

05.04.2018 பங்குனி 22 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுககாரகனான சுக்கிரன் ஜென்ம ராசியிலும் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் 12-ல் சூரியன் இருப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட கடின உழைப்பு தேவை. சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3.

சந்திராஷ்டமம் -   04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். குரு வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். முருக வழிபாடு செய்வது சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5.

சந்திராஷ்டமம் -   -             06-04-2018 பகல் 11.38 மணி முதல் 09-04-2018 அதிகாலை 12.19 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருக்கி கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். 2-ல் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -                 4, 5, 6, 7.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குரு வக்கிர கதியல் இருப்பதால் தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபட்டால் மங்களங்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 6, 7.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள், மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 6-ல் கேது 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் முன் ஜாமீன் பொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது, எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இவ்வாரத்தில் 4-ல் சனி, செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். முடிந்த வரை கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை போன்ற சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு மற்றும் சிவ வழிபாடு தொடர்ந்து செய்து வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5, 6.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும், ராசியதிபதி சுக்கிரன் 7-ல் வலுவாக சஞ்சரிப்பதும் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்-கூடிய நல்ல அமைப்பாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் கூட நட்பு பாராட்டுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் அம்மன் வழிபாடு செய்வதும் நற்பலன்களை கொடுக்கும்.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 6, 7.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனியுடன் 2-ல் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய வாரமாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரத்தில் இருப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் மந்த நிலை ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். முருக வழிபாடு மற்றும் சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 4, 5, 6.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் சிறப்பு. கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முருக கடவுளையும் சிவ பெருமானையும் வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 6, 7.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 2, 3, 4, 5, 6.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 2-ல் புதன், லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால் வாழ்வில் கஷ்டங்கள் குறையும்.

வெற்றி தரும் நாட்கள் - 4, 5, 6, 7.

சந்திராஷ்டமம் -   30-03-2018 மதியம் 01.13 மணி முதல் 01-04-2018 மாலை 05.52 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவில் இருந்த இடையூறுகள் கூட விலகி அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமான பலனை அடையலாம். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ வழிபாடு செய்வதாலும், குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 6, 7.

சந்திராஷ்டமம் -   01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை.


No comments: