Tuesday, June 2, 2015

அந்திம காலமும் பிள்ளைகளின் ஆதரவும்


   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

அந்திம காலமும்  பிள்ளைகளின் ஆதரவும்
                                               
     திருமணம் முடிந்தவுடன் பெரியவர்கள் நம்மை வாழ்த்துவது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று. பதினாறு செல்வங்களில் பிள்ளை செல்வமும் ஒன்று. பிள்ளைகளை பெற்று வளர்த்து பேணிக் காத்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுச் செல்லும் போது தான், நம்மை பெற்றவர்களை பற்றிய அருமை நமக்கு புரியும். கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்த காலங்களில் ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவரின் அரவணைப்பில் அக்குழந்தையானது வளரும். ஆனால் யாரும் தற்போதுள்ள சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்களை விரும்பாதலால் குழந்தைகளும் தனிமையில் வாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தாய் தந்தை இருவருமே பணிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் பிள்ளைகளே we are missing our parents என்று சொல்லுமளவுக்கு கால சூழ்நிலையானது மாறிக் கொண்டு வருகிறது.
     ஜோதிட ரீதியாக நாம் பெற்றெடுத்த குழந்தைகள் நமக்கு உதவியாக இருக்குமா? நம் பெயர் புகழை உயர்த்துமா? அல்லது களங்கம் விளைவிக்குமா? வயதான காலத்தில் நம்மை வைத்து ஒழுங்காக பார்த்துக் கொள்ளுமா? என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ அதை தான் அறுவடையும் செய்ய முடியும். இதற்கு ஒர் உதாரணமும் உண்டு.
     ஒருவன் தன் தந்தைக்கு மண் சட்டியில் சோறு வைத்து திண்ணையில் அமர்ந்து உண்ண கொடுப்பானாம். வீட்டில் கறி மீன் சமைத்தாலும் கிழவருக்கு கிடைப்பது பழைய சோறு தான். இதை அவன் பிள்ளை தினமும் பார்த்துக் கொண்டே இருந்ததாம். திடீரென ஒருவர் முதியவர் இயற்கை எய்திவிட காரியங்களை எல்லாம் முடித்த மகன் அவர் உணவு உண்ட மண் சட்டியை உடைத்து விட முடிவு செய்து, அதை தேடினாராம். ஆனால் அது கிடைக்கவில்லை. உடனே தன் மகனை கூப்பிட்டு தாத்தா சாப்பிட்ட சட்டியை பார்த்தாயா? என கேட்க அச்சிறுவனும் ஒடிச்சென்று ஒர் அறையிலிருந்து அச்சட்டியை எடுத்து வந்தானாம். இதை நீ ஏன் எடுத்து வைத்தாய் என தகப்பன் கேட்க உனக்கு வயதானாதும் சோறு வைக்கத் தான் என்றானாம் மகன். இதிலிருந்து புரிகிறதா? நாம் வாழும் வாழ்க்கை பிறருக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர நம் தலையை நாமே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொண்டது போல ஆகிவிடக் கூடாது.
     நாம் பெற்றெடுத்த குழந்தைகள் நமக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்த வேண்டும் என்றால் நமது ஜெனன ஜாதகத்தில் 5ஆம் வீடும் 5ஆம் அதிபதியும் குரு பகவானும் குரு பகவானின் வீடுகளான தனுசு, மீன ராசிகளும் பலமிழக்காமல் இருப்பது மிகவும் அவசியம். புத்திரகாரகன் குரு பாவிகள் சேர்க்கையோ, சாரமோ பெறாமல் 5ஆம் வீடும் 5ஆம் வீட்டின் அதிபதியும் பலமாக அமைந்திருந்தால் புத்திரர்கள் மூலம் பெயர், புகழ் சமுதாயத்தில் கௌரவம் உயர்வு போன்ற யாவும் உண்டாகும். அது போல குருவின் வீடான தனுசு மீனத்தில்  சுபர் கிரகங்கள் அமைந்து சுபர் சேர்க்கை பார்வையுடன் அமையப் பெற்றாலும் பெற்றப் பிள்ளைகளால் பெயரும் புகழும் உண்டாகும்.
     அதுவே பாவிகளால் சூழப்பட்டாலும் பாவிகளின் பார்வை பெற்றாலும் பிள்ளைகளால் அனுகூலமற்ற பலன்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக நவகிரகங்களில் கொடிய பாவிகளான சனி, ராகு போன்றவை தனுசு அல்லது மீனத்தில் அமைந்திருந்தாலும், சூழ்ந்திருந்தாலும் 5ஆம் வீடும் பலம் இழந்திருந்தாலும் பிள்ளைகளால் அவப்பெயரும் அவர்களால் உதவியற்ற சூழ்நிலையும் உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கைப் பெறாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ அது போல 5ஆம் வீடும் பாவிகள் சேர்க்கை பெறாமலிருப்பது உத்தமம்.
     5ஆம் வீடு பாவிகள் வீடாக இருந்து பாவிகள் ஆட்சிப் பெற்றால் அதிக கெடுதியை ஏற்படுத்துவதில்லை என்றாலும் 5ஆம் வீடு சுபர் வீடாக இருந்து 5ஆம் அதிபதியும் சுபர் சேர்க்கையுடனிருப்பது நற்பலனை உண்டாக்கும்.
     புத்திரகாரகன் குரு பகவான் சனி ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை பெற்று 6,8,12ல் இருந்தாலும் குரு பலமிழந்து உடனிருக்கும் பாவிகள் பலம் பெற்றிருந்தாலும் குழந்தைகளால் அவப்பெயரும் மனக்கவலையும் உதவியற்ற நிலையும் உண்டாகும்.
please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: