காணத்தவறாதீர்
தினமும்
காலை 06-20 மணி முதல் 06.30 மணி வரை
பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல்
அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )
" இந்த நாள் "
என்ற நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்
குரு பெயர்ச்சி பலன் 2015-2016 ரிஷபம்
05.07.2015 முதல் 02.08.2016 வரை
ரிஷபம்; கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ஆம் பாதங்கள்
தன்னை அழகு படுத்திக் கொள்வதில் அதிக அக்கரையும், ஆடை ஆபரணங்களின் மீது ஆர்வமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு 4ல் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். 08.1.2016 முதல் ராகு 4லும் கேது 10லும் சஞசரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். 4ல் சஞ்சரிக்கும் குரு 8,10,12ஆம் வீடுகளை பார்வை செய்வதால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல் படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம்
தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல் நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிர் பாராத வீண் விரயங்களும் ஏற்படும்.
குடும்பப் பொருளாதாராநிலை
கணவன் மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரித்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்
பணியில் நிம்மதியான நிலையிருக்கும் எதிலும் திறம்பட செயல்படுவீர்கள்-. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலை பளு அதிகமாக இருக்கும்.
அரசியல்
மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.
கலைஞர்கள்
பயணங்களால் அலைச்சல்களும் உடல் சோர்வும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
மாணவ மாணவியர்
மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.
குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் 4ஆம் வீட்டில் இக்காலங்களில் சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் வம்பு வழக்குகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதமாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றமும் கிடைக்கும்.
குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும்.7ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நல்ல வரன்கள் தட்டிப் போகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருக்கும். வர வேண்டிய லாபம் தாமதப்படும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.
குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தயோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.
குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 5ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் புத்திர வழியில் மன மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். இது வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் போன்ற சுப காரியங்களும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கக்கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்களும் ஏற்படும். சனி பகவான் 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். சேமிப்புகளும் பெருகும்.
குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு 7ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4ல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சுகஸ்தானமான 4ல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
கிருத்திகை 2,3,4ஆம் பாதங்கள்
எதிலும் விவேகத்துடன் செயல்படும் உங்களுக்கு குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரோகிணி
தன்னை அழகு படுத்தி கொள்வதில் அதிக அக்கரை எடுத்து கொள்ளும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுக வாழ்வு பாதிப்படையும் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1,2ஆம் பாதம்
முரட்டு சுபாவம் இருந்தாலும் அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சேமிப்பு குறையும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் 5,6,8,
நிறம் வெண்மை, நீலம்
கிழமை வெள்ளி, சனி
கல் வைரம்
திசை தென்கிழக்கு
தெய்வம் விஷ்ணு, லட்சுமி
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. 08.01.2016 முதல் ராகு 4லும் கேது 10லும் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. சனி பகவான் 7&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது
please contact my postal adress
Jothidamamani
Jothidamamani
MuruguBalamurugan Ph.D astro.
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment