Wednesday, June 24, 2015

குரு பெயர்ச்சி பலன் & 2015&2016 விருச்சிகம்

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 



குரு பெயர்ச்சி பலன் & 2015&2016  விருச்சிகம் 
05.07.2015 முதல் 02.08.2016 வரை



விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10&ல் வரும் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. எனவே தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். குரு 2,4,6ஆம் வீடுகளை பார்வை செய்வதால் சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அதனால் கடன்களும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். வரும் 08.01.2016 முதல் சர்ப கிரகங்களான கேது 4லும், ராகு 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்து செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

குடும்பப் பொருளாதார நிலை
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழிச் சொற்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். சுக வாழ்க்கை பாதிப்படையும்.

மாணவ மாணவியர்
கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சாரம் செய்கிறார். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலத்தை பெறுவீர்கள்.  ராகு 11&ல் சஞ்சரிப்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை உண்டாகும். சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைவார்கள்

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சாரம் செய்வது சுமாரான அமைப்பாகும். இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்து விட முடியும். சிலருக்கு பழைய கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடைய முடியும். போட்டிகள் சற்றே குறையும். ராகு 11&ல் சஞ்சரிப்பதால் எந்தவித எதிர்ப்புக¬யும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வார்கள்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும். குரு 10&ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 11ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலர் சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பார்கள். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள். நல்ல நண்பர்களின் நட்பும் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். ஏழரை சனி நடைபெறுவதால்  குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வம்பு வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். சர்ப கிரகங்கள் 4,10ல் சஞ்சரிப்பதால் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் இக்காலங்களில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10&ல் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 10&ல் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய சற்று கடன் வாங்க வேண்டிய கூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் போது சிந்தித்து செயல்படவும்-. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வர வேண்டிய பண வரவுகள் தடையின்றி வரும் என்றாலும் எதிர்பாராத திடீர் விரயங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.


விசாகம் 4ஆம் பாதம்
நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அனுஷம்
பலருக்கு சுமை தாங்கியாகவும், மாறுபட்ட மனநிலையை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை
வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது. இதனால் உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்  & 1,2,3,9,
நிறம்  & ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை & செவ்வாய், வியாழன்
திசை  & தெற்கு
கல்   & பவளம்
தெய்வம் & முருகன்

பரிகாரம்
விருச்சிக  ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10&ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது. 4ல் கேது, 10ல் ராகு சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: