Thursday, June 11, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 2016 மிதுனம் ;



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


குரு பெயர்ச்சி பலன்  2015 2016 மிதுனம் ;
05.07.2015 முதல் 02.08.2016 வரை 


மிதுனம் ; மிருகசீரிஷம் 3,4ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள்

பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! 05.07.2015 முதல் 02.08.2016 வரை குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். 3ல் சஞ்சரிக்கும் குரு 7,9,11ஆம் வீடுகளை பார்வை செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதப்படும். 08.01.2016 முதல் ராகு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கு குறை இருக்காது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு ஏற்பட கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

குடும்பப் பொருளாதார நிலை
கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. குரு 7ம் வீட்டை பார்ப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.  கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகம்
பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களின் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்.

அரசியல்
மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் தான் முன்னேற முடியும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.

விவசாயிகள்
விளைச்சல் ஒரளவுக்கு தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல் படுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.

கலைஞர்கள்
தகுந்த பாத்திரங்களுக்காக காத்திராமல் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பறிபோகும். ஆடம்பர வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ மாணவியர்
கல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது.  தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்றாலும் சனி 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3&ல் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். எது எப்படி இருந்தாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 4ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவுகளிலும் சற்று நெருக்கடிகள் நிலவக் கூடும் என்பதால், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலங்களைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதை தவிர்த்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்றாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுக்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் எதிலும் உயர்வுகளைப் பெற முடியும். ராகுவும் 3ல் இருப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும் சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். 6&ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல் படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் அனுகூலப்பலனை அடைய முடியும். போட்டி பொறாமைகள் குறையும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இக்காலங்களில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம்,  வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் ராகு 3&ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3ஆம் அதிபதியான சூரியனின்  நட்சத்திரத்தில் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்கள் ஒரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். ராகு 3ல் இருப்பதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

மிருக சீரிஷம் 3,4ஆம் பாதங்கள்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல் படும் உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

திருவாதிரை
பிடிவாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.

புனர்பூசம்1,2,3 ஆம் பாதம்
அனைவரிடமும் பண்புடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவத நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு இடையூறுகளுக்குப் பின்பே வெற்றிகளைப் பெறுவீர்கள் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செலவது உத்தமம். எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்        5,6,8,
நிறம்             பச்சை, வெள்ளை
கிழமை            புதன், வெள்ளி
கல்              மரகதம்
திசை          வடக்கு
தெய்வம்      விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது.
please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: