Thursday, June 25, 2015

குரு பெயர்ச்சி பலன் - 2015 2016 தனுசு

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்)


 குரு பெயர்ச்சி பலன் - 2015  2016 தனுசு
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்

கம்பீரமான தோற்றமும், சிறந்த தெய்வ பக்தியும், எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றலும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறுவதால் வாழ்வில் எதிர்பாராத விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்றாலும் குரு ஜென்ம ராசி,3,5ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும்.  சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். 08.01.2016 முதல் கேதுபகவான் 3ம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்டு கொண்டிருந்த பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தற்போது கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

குடும்பப் பொருளாதார நிலை
கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.

அரசியல்
மக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் சேமிக்க முடியும்.

கலைஞர்கள்
இது வரை பட்ட துயரங்களுக்கு ஒரு முடிவு வரும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். வரவேண்டிய பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். இழந்தவற்றை மீட்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும்.

மாணவ மாணவியர்
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர் பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக் கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும்இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலைகளே உண்டாகும். பொருளாதார நிலை மேன்மையாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். எந்த வித பிரச்சனை ஏற்பட்டாலும் அவற்றை  முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங்களால் சாதகப் பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம் செல்வாக்கு பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும்.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த வீடு மனை வாங்கும் வாய்ப்பு கிட்டும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. 

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 10ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழில் உத்தியோகத்தில் நெருக்கடிகள் உண்டாகும்.போட்டிகளும் பொறாமைகளும் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளைச் சுமக்க வேண்டியிருக்கும். வேலைப் பளுவும் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதால் உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துகளால் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மக்களின் தேவையறிந்து அரசியல்வாதிகள் செயல்பட்டால் மட்டுமே பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் சஞ்சரித்தாலும் வக்ரகதியிலிருப்பதால் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை அஜீரண கோளாறு போன்றவைத் தோன்றி மருத்துவ செலவுளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவை முழுமையாகப் பெற இயலாது. எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஏழரை சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் மற்றவருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கேது 3ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும்.எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நற்பலனை தரும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சிம்ம ராசியில் சுக்கிரனின்  நட்சத்திரத்தில் 9ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக நல்ல லாபங்கள் கிட்டும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் எந்தவித சிரமமும் ஏற்படாது. போட்டி பொறாமைகள் விலகும். பெரிய முதலீடுகளை -ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் எளிதில் ஈடுபட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை தரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஏழரை சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். எதிர்பாராத விரயங்களும் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். கடன்கள் குறையும்.


மூலம்
எந்த பிரச்சனைகளையும் தைரியமுடன் எதிர் கொள்ளும் நெஞ்சுரம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்புகளும் கிட்டும். ஏழரை சனி தொடருவதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும்.

பூராடம்
எதை கண்டு பயப்படாமல் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு  குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். ஏழரை சனியும் நடைபெறுவதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.

உத்திராடம் 1ஆம் பாதம்
சமூக நலனுக்காக பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரை சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  1,2,3,9
கிழமை  வியாழன், திங்கள்,
திசை    வடகிழக்கு,
நிறம்   மஞ்சள், சிகப்பு,
கல்   புஷ்ப ராகம்,
தெய்வம்  தட்சிணா மூர்த்தி

பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.

please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA


No comments: