Saturday, June 20, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015 - 2016 கன்னி

   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 





" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 


(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 


குரு பெயர்ச்சி பலன்  2015 - 2016 கன்னி 
05.07.2015 முதல் 02.08.2016 வரை

கன்னி ; உத்திரம் 2,3,4ஆம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1,2 ஆம் பாதங்கள்
அழகிய உடல்வாகும், நீல விழியும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12&ல் ஆண்டுக் கோளான குரு பகவான் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் சனி பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். ஜென்ம ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் குரு 4,6,8ஆம் வீடுகளை பார்வை செய்வதால்  பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் சுபவிரயங்கள் ஏற்படும் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலை ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும் என்றாலும்  வேலை பளு அதிகமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. 08.01.2016-&ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தின் மூலம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6&ல் கேது சஞ்சரிக்கவுள்ளதால் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாக கூடும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறைவு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் பெரிய கெடுதியில்லை.

குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருக்கவும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு சுமாரான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகம்
பணியில் சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்து கொண்டால் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன் படுத்தி கொள்ளவும்.

அரசியல்
பெயர் புகழுக்கு இழுக்கு நேராமல் பாதுகாத்து கொள்ள வேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் வீண் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்து கொள்ள முடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராகத்தானிருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க அரும்பாடு பட வேண்டி வரும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.

கலைஞர்கள்
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரினை வாங்கித்தரும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருக்கும்.

மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்று விடமுடியும். சிறுசிறு இடையூறுகள் தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடனிருப்பது நற்பலனை தரும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12&ல் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண விரயங்கள் ஏற்படும். பண வரவுகள் சுமாராகத்தானிருக்கும். சனி பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையேயும் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பிள்ளைகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12&ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களே உண்டாகும். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள், நிம்மதி குறைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 3&ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடி இருக்கும். வீடு மனை போன்றவற்றை வாங்குவதன் மூலம் செய்யும் செலவுகள் சுபச் செலவாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலை பளு குறையும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் ஒரளவுக்கு முன்னேற்றப் பலன்களைப் பெறுவீர்கள். சனியும் 3&ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு, குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை பயன் படுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ஜென்ம ராசியில் ராசியில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் ஏற்படும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். 

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் தன பாக்கியாதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்வதால் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் அதிக சிரமங்களை எதிர் கொண்டே வெற்றியினைப் பெற முடியும்.  3&ல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியில் சஞ்சரித்தாலும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரம் ஒரளவுக்கு ஏற்றம் அளிக்கும். போட்டி பொறாமைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. 

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் இக்காலங்களில் சூரியனின் நட்சத்திரத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்றப் பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தினை அடைந்து விட முடியும். தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் எதிர் பார்க்கும் உயர்வினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. 6ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.

உத்திரம் 2,3,4ஆம் பாதங்கள்
எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தடம் மாறாத பண்பு கொண்ட உங்களுக்கு குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் லாபத்தினை அடைய முடியும். கடன்கள் குறையும்.

அஸ்தம்
அழகான முக அமைப்பு வசீகரமான தோற்றமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் விரயங்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்ற படியிருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்  செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதால் நற்பலனைப் பெற முடியும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகத்தில் தடைகளுக்கு பின் உயர்வு கிட்டும்.

சித்திரை 1,2ஆம் பாதங்கள்
ஆன்மீக தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12&ல் குரு சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல் படுவது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையே இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கடன்கள் ஒரளவுக்கு நிவர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் உண்டாகும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுதல்களை பெற முடியும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்   4,5,6,7,8
நிறம்   பச்சை, நீலம்
கிழமை  புதன், சனி
கல்    மரகத பச்சை
திசை   வடக்கு
தெய்வம்  ஸ்ரீவிஷ்ணு
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 12ல் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரம் செய்வது நல்லது 12ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.



please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: