Tuesday, June 2, 2015

குரு பெயர்ச்சி பலன் - 2015 2016 மேஷம்



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 



" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 

குரு பெயர்ச்சி பலன் -  2015   2016  மேஷம்
05.07.2015 முதல் 02.08.2016 வரை 

மேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்
எடுக்கும் காரியங்களை வேகத்தோடும் விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 9,12க்கு அதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். 5ல் சஞ்சரிக்கும் குரு ஜென்மராசி,9,11ஆம் வீடுகளை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இது வரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். 08.01.2016 முதல் 11ஆம் வீட்டில் கேது சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.
உத்தியோகம்
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்க பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்
பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
கலைஞர்கள்
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவது ஆரோக்கிய ரீதியாக சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் மலை போன்ற பிரச்சனைகளும் பணி போல் மறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாக கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சேமிப்பும் பெருகும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம் ஸ்தானமான 5&இல்  சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும். 6&ல் ராகு சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மூலம் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். குடும்பத்திலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் ஒற்றுமை பலப்படும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம் ஸ்தானமான 5&இல்  சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது, அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் சிறு சிறு வீண் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 6ம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும்.  எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சனி 8&ஆம் வீட்டிலிருப்பதால் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் போட்டி பொறாமைகளையும் சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு சுமாரான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பத்திரிக்கை நண்பர்களிடம் விரோதம் பாராட்டாமலிருப்பது நல்லது. 

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் சுமாரான நற்பலன்களையே எதிர் பார்க்க முடியும். உடல் நிலையில் சற்றே சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் மந்தமாகவே செயல்பட முடியும்.  குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் சிறு சிறு வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சனி 8&இல் சஞ்சரித்து அஷ்டம சனி நடைபெறுவதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். கேது 11ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குருபகவான் ஜென்ம ராசிக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் பஞ்சம ஸ்தானமான 5&ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். சுகவாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகனை காப்பாற்ற முடியும். சிலருக்கு பூமி வழியில் லாபம் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அசையும் அசையா சொத்துக்களால் லாபம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நற்பலன்களை பெற முடியும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்டு கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவற்றை தடையின்றி அடைய முடியும்.

அசுவினி
ஆன்மீக தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு குரு பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அசையும் அசையா செத்துக்களால் லாபம் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும்.

பரணி
சுகவாழ்வு சொகுசு வாழ்வை அதிகம் விரும்பும் உங்களுக்கு குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது, அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகனை காப்பாற்ற முடியும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும்.

கிருத்திகை 1ஆம் பாதம்
முன் கோபம் அதிகம் இருந்தாலும் இளகிய மனம் கொண்ட உங்களுக்கு குருபகவான் 5&இல்  சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு பூமி வழியில் லாபம், அசையும் அசையா செத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்   1,2,3,9
நிறம்   ஆழ்சிவப்பு
கிழமை  செவ்வாய்
கல்   பவளம்
திசை   தெற்கு
தெய்வம்  முருகன்

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு அஷ்டமச்சனி நடப்பதால் சனி ப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் சனிக்கு பரிகாரம் செய்வது ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு. 08.01.2016 முதல் ராகு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: