Sunday, June 14, 2015

குரு பெயர்ச்சி பலன் 2015- 2016 கடகம் :



   

காணத்தவறாதீர்

தினமும் 

 காலை 06-20  மணி முதல் 06.30  மணி வரை

 பஞ்சாங்க குறிப்பு,ராசிப்பலன்,ஜோதிட தகவல் 

அடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் ) 




" இந்த நாள் "

                                           என்ற  நிகழ்ச்சியினை காணத்தவறாதீர் 



(05.07.2015 காலை 06-30  மணி 

முதல் 07.00  மணி வரை  
குரு பெயர்ச்சி பலனை   
காணத்தவறாதீர்) 





குரு பெயர்ச்சி பலன்  2015- 2016 கடகம் :  

05.07.2015 முதல் 02.08.2016 வரை


கடகம் : புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே! பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தபானமான 2ம் வீட்டில் 05.07.2015 முதல் 02.08.2016 வரை சஞ்சாரம் செய்கிறார்.2ல் சஞ்சரிக்கும் குரு 6,8,10,ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.  சனி பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் லாபங்கள் தடைபடாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். 08.1.2016 முதல் ராகு 2லும் கேது 8லும் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.

குடும்பப் பொருளாதார நிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.

உத்தியோகம்
பணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.

அரசியல்
பெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சேமிப்பும் பெருகும்.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமலிருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேமிப்பீர்கள்.

மாணவ மாணவியர்
நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.

குரு பகவான் மகம் நட்சத்திரத்தில் 05.07.2015 முதல் 07.09.2015 வரை
குரு பகவான் கேதுவின் நட்சத்திரத்திரல் ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 08.09.2015 முதல் 17.11.2015 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். 

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 18.11.2015 முதல் 19.12.2015 வரை
குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்கிறார். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கடன்கள் குறையும். 

குரு பகவான் அதிசாரமாக கன்னி ராசியில் 20.12.2015 முதல் 19.01.2016 வரை
குருபகவான் இக்காலங்களில் அதிசாரமாக ராசிக்கு 3ஆம் வீடான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பத்திரிக்கை நண்பர்களை அனுசரித்துச் செல்லவும்.

குரு பகவான் வக்ர கதியில் 20.01.2016 முதல் 18.05.2016 வரை
குரு பகவான் வக்ரகதியில் இருப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். 08.01.2016 முதல் 2ல் ராகு 8ல் கேது சஞ்சரிப்பப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை.

குரு பகவான் பூர நட்சத்திரத்தில் 19.05.2016 முதல் 11.07.2016 வரை
குரு பகவான் சுக்கிரனின் நட்சததிரத்தில் ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகளை கொடுக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 12.07.2016 முதல் 02.08.2016 வரை
குரு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான அனுகூலங்களை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 2ல் ராகு 8ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

புனர் பூசம் 4ஆம் பாதங்கள்
அதிகார குணமும் பிறரை அடக்கி ஆளும் சுபாவமும், நல்ல நிர்வாகத் திறமையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல உயர்வுகளும் லாபங்களும் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.

பூசம்
முன் கோபம் இருந்தாலும் அனைவரிடமும் தன்மையாகவே பழகும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2ல்சஞ்சாிப்பதால் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் தடையின்றி பெற முடியும். கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும்.

ஆயில்யம்
தான் கற்றதை பிறருக்கும் கற்றுரைக்கும் நற்குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்  1,2,3,9,
நிறம்  வெள்ளை, சிவப்பு
கிழமை  திங்கள், வியாழன்
கல்  முத்து
திசை  வடகிழக்கு
தெய்வம்  வெங்கடாசலபதி

பரிகாரம்

கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. 08.01.2016 முதல் 2ல் ராகு 8ல் கேது சஞ்சரிக்கவிருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.


please contact my postal adress  
Jothidamamani

MuruguBalamurugan 
 Ph.D astro.

No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani,  Chennai-600026 Near Bank of Baroda   
 My Cell - 0091 - 7200163001,  9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan


E-mail  murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web  www.muruguastrology.com

BANK ACCOUNTS DETAILS ARE

Name ; Murughu Balamurugan

Bank name - Indianbank

Savings Account No - 437753695

Branch name - Saligramam,

Chennai - 600093.INDIA.

MICR no - 600019072

IFS code ; IDIB000S082

CBS CODE-01078

or

Name ; Murugubalamurugan

Bank name  - Bank of Baroda

Savings Account No - 29900100000322

Branch name - VadapalaniChennai - 600026.

INDIA.MICR Code - 600012034

IFSC code ; BARBOVADAPA

No comments: