Thursday, January 28, 2021

வார ராசிப்பலன்- ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6 வரை 2021

 

வார ராசிப்பலன்- ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6 வரை 2021

தை 18 முதல் 24 வரை

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்

ராகு 

 

புதன்

திருக்கணித கிரக நிலை

 

 

சூரிய சனி  குரு  சுக்கி

சந்திர

 

கேது  

 

 

 

 

 

 

 

 

 

           

 

 

கிரக மாற்றம்

04-02-2021 மகர புதன் (வக்ர) இரவு 11.05 மணிக்கு

 

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

சிம்மம்           30-01-2021 அதிகாலை 03.21 மணி முதல் 01-02-2021 காலை 06.58 மணி வரை.

கன்னி            01-02-2021 காலை 06.58 மணி முதல் 03-02-2021 காலை 09.49 மணி வரை.

துலாம்           03-02-2021 காலை 09.49 மணி முதல் 05-02-2021 பகல் 12.47 மணி வரை.

விருச்சிகம்   05-02-2021 பகல் 12.47 மணி முதல் 07-02-2021 மாலை 04.14 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

01.02.2021 தை 19 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

 

03.02.2021 தை 21 ஆம் தேதி புதன்கிழமை சஷ்டி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை

 

04.02.2021 தை 22 ஆம் தேதி வியாழக்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை

 

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகள் உண்டாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்தையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குரு பகவான் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3, 4.

சந்திராஷ்டமம் -      05-02-2021 பகல் 12.47 மணி முதல் 07-02-2021 மாலை 04.14 மணி வரை.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பார்ப்பதற்கு சாதாரணமானவராக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், குரு சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக வளமான பலன்களை பெறுவீர்கள். தாராள தன வரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். முருக வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் முன்னேற்றத்தை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -     3, 4, 5, 6.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன், குரு 8-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற கடன்களை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். சிவ வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     31, 5, 6.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு, சுக்கிரன், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். சூரியன் 7-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுபகாரியங்கள் கைகூடும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். விஷ்ணு வழிபாடும், சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     31, 3, 4, 5.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன், குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 5, 6.

                                                 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் என்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -     31, 3, 4, 5.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம்.  செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியையும், துர்கையம்மனையும் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     31, 1, 2, 5, 6.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது, துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     1, 2, 3, 4, 5.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. முடிந்தவரை முன்கோபத்தை குறைப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருந்தால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். சனி பகவானை வழிபடுவதும் விஷ்ணு வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -     4, 5, 6.

சந்திராஷ்டமம் -      30-01-2021 அதிகாலை 03.21 மணி முதல் 01-02-2021 காலை 06.58 மணி வரை.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், குரு, சனி சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் மேன்மையை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -     31, 5, 6.

சந்திராஷ்டமம் -      01-02-2021 காலை 06.58 மணி முதல் 03-02-2021 காலை 09.49 மணி வரை.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சூரியன், சனி சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை உங்களது நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. முருக வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -     31, 1, 2.

சந்திராஷ்டமம் -      03-02-2021 காலை 09.49 மணி முதல் 05-02-2021 பகல் 12.47 மணி வரை.

 

No comments: