Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - மகரம்

 

புத்தாண்டு பலன் & 2021 - மகரம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

மகரம் உத்திராடம் 2,3,4&ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2&ஆம் பாதங்கள்.

எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக் கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டில் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரித்து ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதும், ஜென்ம ராசியில் ஆண்டு கோளான குரு வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை சஞ்சரிக்க இருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது. அதிக அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.  ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற தாமதம் ஆகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். கஷ்டபட்டு உழைத்தால் தான் நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீடுகளை எடுக்க முடியும். பண முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் செய்பவர்களுக்கு வேலைபளு அதிகரிப்பதோடு அதிக அலைச்சல் தேவையற்ற பயணங்கள் ஏற்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலமற்ற பலன்களை சந்திக்க நேரிடும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை, பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் உள்ள தடைகள் விலகி நற்பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். பொன் பொருள் சேரும். வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கக் முயற்சித்தால் நன்மை கிடைக்கும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்& வாங்கலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த தேக்கங்கள் விலகும். உத்தியோக ரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

 

உடல் ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அடிக்கடி ஏதாவது சிறு சிறு பாதிப்பு உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டு சேமிப்புக் குறையும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது மூலம் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.

குடும்பம் பொருளாதார நிலை

பணவரவுகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கைகூடும். கணவன்& மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். முடிந்த வரை உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கொடுக்கல்& வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்த்த லாபத்தை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரளமான நிலை உண்டாகும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தும் போதும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் தாமத நிலையை சந்திக்க நேரிடும். ஆண்டின் முற்பாதியில் நெருக்கடி நிலையை சந்தித்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் உங்கள் பெயரில் செய்வதை விட குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்பதால் நிம்மதி குறைவு ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

பெண்கள்

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, சத்தான உணவுகளை உட்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். புத்திர வழியில் சிறுசிறு மனச் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்ல வரன்கள் தேடி வரும்.

அரசியல்

எடுக்கும் எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். வரும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு  பொருளாதார நிலை மேம்படும். செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது, உடனிப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சற்று சுமாராக இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியை தரும். நீங்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற்றங்களை அடைய முடியும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் மற்ற கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணத்தொகைகள் சில தடைகளுக்குப் பின் வந்து சேரும். படபிடிப்புகளுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நவீன பொருட்களை வாங்க முடியும்.

மாணவ& மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஒரளவுக்கு முன்னேற்றப் பலனை அடைய முடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புக்கள் ஏற்பட்டு மன அமைதி குறையும் சூழ்நிலை ஏற்படும். நல்ல நண்பர்களாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் &  5,6,8      நிறம் & நீலம், பச்சை  கிழமை & சனி, புதன்

கல் & நீலக்கல்   திசை & மேற்கு        தெய்வம் & விநாயகர்

No comments: