Saturday, January 2, 2021

புத்தாண்டு பலன் - 2021 - துலாம்

 

புத்தாண்டு பலன் & 2021 - துலாம்

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

 

துலாம் சித்திரை 3,4&ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3&ஆம் பாதங்கள்.

மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் 2021&ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 4, 5&க்கு அதிபதியான சனி சுக ஸ்தானமான 4&ல் சஞ்சரிக்க உள்ளார். அதுமட்டுமின்றி சர்ப்ப கிரகமான ராகு 8&லும், கேது 2&லும் சஞ்சரிக்க உள்ளனர். ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு வரும் 06&04&2021 வரை மற்றும் 14&09&2021 முதல் 20&11&2021 வரை உங்கள் ராசிக்கு 4&ல் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு இடையூறுகள் ஏற்படும். கணவன்& மனைவி இடையே ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பண வரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்& வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

      உங்கள் ராசிக்கு 4&ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06&04&2021 முதல் 14&09&2021 வரை மற்றும் 20&11&2021 முதல் பஞ்சம ஸ்தானமான 5&ல் சஞ்சரிக்க இருப்பதால் ஆண்டின் தொடக்கத்தில் உள்ள பொருளாதார ரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்& வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமானப் பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சற்று நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். பொருட் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வேலைபளு காரணமாக உடல் அசதி ஏற்படும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் எடுத்து செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் வரும் ஏப்ரலுக்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். சிலருக்கு வெளியூர் செல்ல கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

 

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களது பணி நிமித்தமாக அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறு, சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும் என்றாலும் ஏப்ரல் மாதம் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் ஒரளவுக்கு சாதகமானப் பலன்களை அடைய முடியும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் வீண் கருத்து வேறுப்பாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி அளிக்கும். நினைத்த காரியங்கள் சிறு தடை உடன் கை கூடும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல்& வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர் கொண்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செய்லபடுவது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்& வாங்கல் ஒரளவுக்கு சாதகமாக அமையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சிறு தடைக்கு பின்பு சாதகப்பலனை அடைய முடியும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிலும் மேன்மையான பலன்களை பெற முடியும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களை பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிட்டும். பயணங்களில் கவனமாக செயல்பட்டால் சாதகப்பலனை அடைய முடியும்.

உத்தியோகம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஏப்ரலுக்கு பிறகு அனுகூலப் பலனை பெற முடியும். பணியில் திறம்பட செயல்படுவதால் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்.  வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சில நேரங்களில் சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும்.

பெண்கள்

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, உட்டசத்து நிறைந்த உணவுகள் மற்றும் இயற்கை உணவுகளை உட்கொள்வது மூலம் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க முடியும். கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் ஏப்ரலுக்கு பிறகு ஒரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும்.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் பலவித சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியான முன்னேற்றத்தை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது மிகவும் நல்லது.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் நீங்களே கலத்தில் இறங்கி பணியாற்ற வேண்டிய நிலை உண்டாகும். அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். கடன்கள் சற்று குறையும்.

கலைஞர்கள்

தேவையற்ற பிரச்சினைகளால் பெயர், புகழ் மங்க கூடிய சூழ்நிலைகள் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு ஒரளவுக்கு நல்ல வாய்ப்புகளை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்படையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகி உடல் நலம் பாதிப்படையும்.

மாணவ& மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் கடும் முயற்சிகளை மேற்கொள்வது நல்வது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஏப்ரலுக்கு பிறகு கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்து பழகுவது நல்லது.

 

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் & 4,5,6,7,8    நிறம் & வெள்ளை, பச்சை    கிழமை & வெள்ளி, புதன்

கல் & வைரம்          திசை & தென் கிழக்கு        தெய்வம் & லக்ஷ்மி

No comments: