Saturday, January 16, 2021

வார ராசிப்பலன் ஜனவரி 17 முதல் 23 வரை 2021

வார ராசிப்பலன்

ஜனவரி 17 முதல் 23 வரை 2021

தை 4 முதல் 10 வரை

 

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

 

செவ்

ராகு 

 

சந்திர

திருக்கணித கிரக நிலை

 

 

சூரிய சனி  குரு புதன்

 

சுக்கி

கேது  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கிரக மாற்றம் இல்லை

 

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

கும்பம்         15-01-2021 மாலை 05.05 மணி முதல் 18-01-2021 அதிகாலை 01.16 மணி வரை.

மீனம்            18-01-2021 அதிகாலை 01.16 மணி முதல் 20-01-2021 பகல் 12.36 மணி வரை.

மேஷம்         20-01-2021 பகல் 12.36 மணி முதல் 23-01-2021 அதிகாலை 01.25 மணி வரை.

ரிஷபம்        23-01-2021 அதிகாலை 01.25 மணி முதல் 25-01-2021 பகல் 01.02 மணி வரை.

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

18.01.2021 தை 05 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

 

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.

சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். தை கிருத்திகை நாளில் முருக வழிபாட்டை மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           17, 20, 21, 22.

 

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும்.  பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. தாராள தன வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாதுடன் கடன்களும் சற்று குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மகாலட்சுமியையும், துர்கையம்மனையும் வழிபாடு செய்தால் நன்மைகள் பல உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20, 23.

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.

நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. சூரியன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். உங்கள் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப் பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். சிவ வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20, 21, 22.

 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் குரு, புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் -           21, 22, 23.

சந்திராஷ்டமம் - 15-01-2021 மாலை 05.05 மணி முதல் 18-01-2021 அதிகாலை 01.16 மணி வரை.

 

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.

இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று கவனம் தேவை. தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும்.  உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். விஷ்ணு வழிபாடு மற்றும் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           17, 23.

சந்திராஷ்டமம் - 18-01-2021 அதிகாலை 01.16 மணி முதல் 20-01-2021 பகல் 12.36 மணி வரை.

 

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.

பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், குரு சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தை கிருத்திகை நாளில் விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் -           17, 18, 19.

சந்திராஷ்டமம் - 20-01-2021 பகல் 12.36 மணி முதல் 23-01-2021 அதிகாலை 01.25 மணி வரை.

 

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.

வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் தாமதப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்த வித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20, 21, 22.

சந்திராஷ்டமம் - 23-01-2021 அதிகாலை 01.25 மணி முதல் 25-01-2021 பகல் 01.02 மணி வரை.

 

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, கடந்த கால பிரச்சினைகள் விலகும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் எந்த சிக்கலையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். துர்கையம்மன் வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -           20, 21, 22, 23.

 

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.

எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். 2-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் -           17, 23.

 

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.

எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும், பொறுமையுடனும் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது, சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது நற்பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20.

 

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.

அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். 12-ல் சூரியன், குரு இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் சோர்வு, கை, கால் வலி போன்றவை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிவ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் சிறப்பான பலன்களை தரும்.

வெற்றி தரும் நாட்கள் -           17, 20, 21, 22.

 

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .

தயாள குணமும், பொறுமையும், தன்னம்பிக்கையும், உடையவர்களாவும் திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சனி, குரு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் வளமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி மற்றும் கிருத்திகை விரதங்கள் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -           18, 19, 20, 23.

 

 

 


No comments: