Saturday, March 4, 2017

வார ராசிப்பலன் - மார்ச் 5 முதல் 11 வரை 2017


மாசி  21   முதல்  27  வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



சுக்கி வ

செவ்

சந்தி

கேது  சூரிய
புதன்
திருக்கணித கிரக நிலை





ராகு

சனி 


               
குரு  (வ)

கிரக மாற்றம்
11.03.2017 மீன புதன் அதிகாலை  02.37 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்            04.03.2017 காலை 05.42 மணி முதல் 06.03.2017 காலை 08.24 மணி வரை.
மிதுனம்          06.03.2017 காலை 08.24 மணி முதல் 08.03.2017 பகல் 11.59 மணி வரை.
கடகம்              08.03.2017 பகல் 11.59 மணி முதல் 10.03.2017 மாலை 04.59 மணி வரை.
சிம்மம்            10.03.2017 மாலை 04.59 மணி முதல் 12.03.2017 இரவு 11.55 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
09.03.2017 மாசி 25 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன் புதன், 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். பொன், பொருள் போன்றவற்றையும் வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்காதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் அரிகரிக்கும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற சற்ற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     5,8,9,10.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் சுக்கிரன், 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். பண வரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் கால தாமங்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீட செய்யாதிருப்பது உத்தமம். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தட்சிணாமூர்தியை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8,11.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும். நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் செவ்வாய், அதிசாரமாக 6ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வெளியாட்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மாணவர்கள்  எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,8,9,10.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் ராகு 7ல் சூரியன், கேது, 8ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்வதில் மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். போட்டிகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்படுவது தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8,11.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், கேது 7ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். முடிந்தவரை உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள்  கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8,9,10.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சூரியன், 7ல் செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11ல் ராகு, அதிசாரமாக 3ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் அனுகூலமானப் பலனை பெறுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். விநாயகப் பொருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     8,9,10,11.
சந்திராஷ்டமம்  04.03.2017 காலை 05.42 மணி முதல் 06.03.2017 காலை 08.24 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பது தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 6ல் செவ்வாய் 5ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து அனுகூலப்பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப் பாகவே செயல்படுவீர்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     5,11.
சந்திராஷ்டமம்          06.03.2017 காலை 08.24 மணி முதல் 08.03.2017 பகல் 11.59 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்கு பின் அனுகூலங்களை பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்தால் நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     5,6,7.
சந்திராஷ்டமம்                      08.03.2017 பகல் 11.59 மணி முதல் 10.03.2017 மாலை 04.59 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், கேது, 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாதுவரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     6,7,8,9.
சந்திராஷ்டமம்                      10.03.2017 மாலை 04.59 மணி முதல் 12.03.2017 இரவு 11.55 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேற கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்கள் சற்றே குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     8,9,10,11.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய், 12ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபடவும்.


வெற்றிதரும் நாட்கள்     5,11.

No comments: