Wednesday, March 29, 2017

இன்று - 29.03.2017

இன்று -  29.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்?-  -முனைவர் முருகு பாலமுருகன்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS


வார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை 
முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                  முனைவர் முருகு பாலமுருகன்

உன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்!-
ஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி

குறியீடுகளின் தத்துவம்! –                  சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

ராகு காலத்திலும் நல்ல நேரம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

ஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                -விசு அய்யர்

ஒளிமயமான எதிர்காலம் மூவரிடத்தில்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பாலாரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     
-முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
29.03.2017, பங்குனி - 16, புதன்கிழமை,    துதியை திதி பின்இரவு 02.47 வரை பின்பு வளர்பிறை திரிதியை, ரேவதி நட்சத்திரம் பகல் 11.38 வரை பின்பு அஸ்வினி, நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, சந்திர தரிசனம், தெலுங்கு வருட பிறப்பு.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய சந்தி சுக்கி(வ)
செவ் புதன்



கேது 
திருக்கணித கிரக நிலை
29.03.2017



ராகு
சனி

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  29.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷபம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனை தீரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடனிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களை மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.38 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
துலாம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். வெளி வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் தோன்றும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை கொடுக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும்விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

No comments: