Friday, March 3, 2017

இன்று - 03.03.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
03.03.2017, மாசி 19, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 10.43 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம் இரவு 12.04 வரை பின்பு கிருத்திகை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சுக்கி  
செவ் சந்தி


சூரிய கேது 
புதன்
திருக்கணித கிரக நிலை
03.03.2017




ராகு
சனி 

               
குரு  (வ)


இன்றைய ராசிப்பலன் -  03.03.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும்.
ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சனை குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
துலாம்
இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
மகரம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் புரிபவர்க்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். சேமிப்பு குறையும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதற்குக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

No comments: