Friday, March 24, 2017

வார ராசிப்பலன் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை 2017 (பங்குனி 13 முதல் 19 வரை)


வார ராசிப்பலன் மார்ச்  26 முதல் ஏப்ரல் 1 வரை   2017 (பங்குனி 13 முதல்  19 வரை)                                

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சுக்கி வ
புதன்
சூரிய
செவ்



கேது 
சந்தி

திருக்கணித கிரக நிலை





ராகு

சனி 


               
குரு  (வ)


கிரக மாற்றம்

27-03-2017 மேஷ புதன் காலை 10.05 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் மலேசியா நேரம்

கும்பம்             25-03-2017 காலை 07.23 மணி முதல் 27-03-2017 மதியம் 12.08 மணி வரை.
மீனம்                                27-03-2017 மதியம் 12.08 மணி முதல் 29-03-2017 மதியம் 02.09 மணி வரை.
மேஷம்           29-03-2017 மதியம் 02.09 மணி முதல் 31-03-2017 மதியம் 03.05 மணி வரை.
ரிஷபம்            31-03-2017 மதியம் 03.05 மணி முதல் 02-04-2017 மாலை 04.35 மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

26-03-2017 பங்குனி 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, திரயோதசி திதி, சதய நட்சத்திரம், சித்தயோகம், காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் மேஷ லக்னம். தேய்பிறை

30-03-2017 பங்குனி 17-ஆம் தேதி வியாழக்கிழமை, திரிதியை திதி, அஸ்வினி நட்சத்திரம், அமிர்தயோகம் காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் ரிஷப லக்னம். வளர்பிறை

மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களேஉங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் அதிசாரமாக சனி, 11-ல் கேது சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன் - மனைவியிடையே சிறுசிறு கருத்து  வேறுபாடுகள் தோன்றும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உற்றார் - உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் கிட்டும்.


வெற்றிதரும் நாட்கள் -                  26, 29, 30, 31.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் - மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் - உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வதுஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -  26,27,28,1.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழி நடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்களை சந்திக்க வேண்டியிருக்கும். கணவன் - மனைவி சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்


வெற்றிதரும் நாட்கள் -                  27, 28, 29, 30, 31.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, ருண, ரோக ஸ்தானமான 6-ல் அதிசாரமாக சனி, 9-ல் சுக்கிரன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமாக சுபகாரியங்கள் கை கூடும். கணவன் - மனைவியிடையே தேவையற்ற வாக்கு - வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூ,ர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் இருக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் சற்று குறையும். கொடுக்கல் - வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -                  29, 30, 31, 1.

சந்திராஷ்டமம்  -      25-03-2017 காலை 07.23 மணி முதல் 27-03-2017 மதியம் 12.08 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதாலும், 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குரு 2ல் உள்ளதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் - கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்ளவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் நற்பலனை அடையலாம்.


வெற்றிதரும் நாட்கள் -                                 26, 1.

சந்திராஷ்டமம்  -      27-03-2017 மதியம் 12.08 மணி முதல் 29-03-2017 மதியம் 02.09 மணி வரை.
கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், அதிசாரமாக 4-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள், தேவையற்ற வாக்கு - வாதங்கள் உண்டாகலாம். கணவன் - மனைவிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார்- உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் நடக்க இருந்த சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல் - வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கரை எடுத்து கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.


வெற்றிதரும் நாட்கள் -                  26, 27, 28.

சந்திராஷ்டமம்  -                      29-03-2017 மதியம் 02.09 மணி முதல் 31-03-2017 மதியம் 03.05 மணி வரை.
துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், 11-ல் ராகு, அதிசாரமாக 3-ல் சனி சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலமும் கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த காலங்களிலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் கடன்களைக் குறைக்க முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -                  27, 28, 29, 30.

சந்திராஷ்டமம்  -      31-03-2017 மதியம் 03.05 மணி முதல் 02-04-2017 மாலை 04.35 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன் - மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார்- உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டுப் போட்களில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். அனுமனை வழிபடுவது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -                  29, 30, 31, 1.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், 10-ல் குரு சஞ்சரிப்பதும், ஏழரைச்சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுகவாழ்வில் பாதிப்பும், வீண் விரயங்கள் உண்டாகலாம். கணவன் - மனைவியிடையே தேவையற்ற வாக்கு, வாதங்களும், கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பா£த்த நற்பலன் தாமதப்படும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் - வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவபெருமானை வழிபடுவது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -                  26, 1.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 3-ல் சூரியன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் - வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் -                  27, 28, 29.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள்இ சதயம், பூரட்டாதி, 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய், அதிசாரமாக 11-ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும்எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன் - மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் - உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணயில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.


வெற்றிதரும் நாட்கள் -                  26, 29, 30, 31.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
தயாள குணமும், பொறுமையும், தன்னம்பிக்கையும், உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும்  விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், அதிசாரமாக 10-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு - வாதங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். பணம் கொடுக்கல் - வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும்  எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -  27, 28, 29, 1.


No comments: