இராகு கேது பெயர்ச்சி பலன்கள்
2014-2016 கடகம் ;
புனர்பூசம் 4&ம் பாதம், பூசம், ஆயில்யம்
எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் நல்ல அறிவாற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே! ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகுவும், 9&ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக வழியில் நற்பலன்களை பெறுவீர்கள். 16.12.2014 முதல் சனி பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மேலும் பல நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிட்டும். 05.07.2015 முதல் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.
உடல் நிலை
உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். சிறு சிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு அஜீரண கோளாறு போன்றவை தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும்.
குடும்பம் குழந்தை
கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் சற்று தாமதமாக நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருந்தாலும் முடிந்த வரை கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சிந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறி நிலையில் இருக்கும்.
தொழில் வியாபாரம்
செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிட்டும்.
பெண்களுக்கு
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மணமாகாதவர்களுக்கு சற்று தாமதமாக மணமாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும்.
அரசியல்வாதிகளுக்கு
கட்சி பணிகளுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று வரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்தும் தேவைக்கேற்ப அமையும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உழைப்பாளர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும்.
கலைஞர்களுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வர வேண்டிய சம்பள பாக்கிகளில் சற்று இழுபறி நிலையிருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். படபிடிப்பிற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு போட்டிகளையும் எதிர் கொள்ள நேரிடும்.
மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்ள வேண்டி வரும். நல்ல நட்புக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யு-ம் போது கவனமுடனிப்பது நல்லது.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3&லும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவான் ஜென்ம ராசியிலும் சனி 4&லும் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 3&இல் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களை பெற முடியும். இது வரை நடைபெற்ற அர்த்தாஷ்டம சனியால் வீண் அலைச்சல்கள் அசையா சொத்துக்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் வரும் 16.12.2014 முதல் சனி மாறுதலாகி 5ஆம் வீட்டிற்கு செல்ல விருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண வரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ராகு 3இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் ஒரளவுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.5&இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் சற்றே மருத்துவ செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களையேப் பெற முடியும். இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 2ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் அனுகூலமான பலன்களை அள்ளி தருவார். சனியும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் போட்டிகள் குறையும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை.
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மணமாகதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சமபவங்கள் நடைபெறும். பல பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சனி 5&இல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பொன் பொருள் சேரும் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இடமாற்றம் போன்ற யாவும் கிடைக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்,
பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும் கொண்ட உங்களுக்கு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்ததியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
பூசம்
எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு, பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். சிலர் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள்.
ஆயில்யம்
நல்ல பேச்சாற்றலும், கல்வி, அறிவும், சகல வித்தைகளை கற்றறியும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். அதி நவீன பொருட்களை வாங்கி சேர்க்கும் வாய்ப்பு உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கெடுபிடிகள் குறையும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் 1,2,3,9,10,11,12,18
நிறம் வெள்ளை, சிவப்பு
கிழமை திங்கள், வியாழன்
கல் முத்து
திசை வடகிழக்கு
தெய்வம் வெங்கடாசலபதி
பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 16.12.2014 சனி 5இல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment