குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;
பூரட்டாதி &4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவி கரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு 5 ஆம் வீட்டில் உச்சம் பெற்று 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இது வரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைகிறது. அதன் பின் சனி 9 இல் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்க பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியம் கைகூடும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.
.படிப்பு
கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம் ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும். இது வரை 2,8&இல் சஞ்சரித்த ராகு கேது 21.06.2014 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&ஆம் வீட்டிலுமாக சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்திலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் ஒற்றுமை பலப்படும்.
குரு பகவான் பூச நட்சத்தரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
ஜென்ம ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். உங்களுக்கு அஷ்டம சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது 7 இல் ராகுவாக சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் மலை போன்ற பிரச்சனைகளும் பணி போல் மறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாக கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உத்தியோக உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சேமிப்பும் பெருகும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
ராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் திருப்தியான நிலையிருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ஜென்ம ராசிக்கு 6 ஆமிடம் என்பதால் அவ்வளவு சாதகமான நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் பொறாமைகள் ஏற்படுவதால் வர வேண்டிய வாய்ப்புகளில் இழுபறி நிலை ஏற்படும். எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைவது குறிப்பிட தக்கது.
குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை
குரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் சுமாரான நற்பலன்களையே எதிர் பார்க்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்த நிலை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் மந்தமாகவே செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் சிறு சிறு வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சனி 9&இல் சஞ்ரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்தரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
ராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மீண்டும் முன்னேற்றப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கை கூடும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர் பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும்.
பூரட்டாதி&4ம் பாதம்
யாருக்கும் தொந்தரவு தராத குணமும், இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களில் தடைவிலகி தடபுடலாக நடந்தேறும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் உண்டு. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.
உத்திரட்டாதி
பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசுக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு 5 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும் கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.
ரேவதி
எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமானப் பதவி உயர்வுகளைப் பெற முடியும். பயணங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் 1,2,3,9,10,11,12
கிழமை வியாழன், ஞாயிறு
திசை வடகிழக்கு
நிறம் மஞ்சள், சிவப்பு
கல் புஷ்ப ராகம்
தெய்வம் தட்சிணாமூர்த்தி
பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும், 7 இல் ராகுவும் சஞ்சாரம் செய்ய விருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்யுவும். 16.12.2014 வரை அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கவுள்ளதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது, தினமும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,S/O Murugu Rajendran,No 33 Palani andavar koil street,Vadapalani Chennai -600026,South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment