இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;
கிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2&ம் பாதங்கள்
பொன் பொருள் மீது அதிக ஆசையும் இனிமையான பேச்சாற்றலும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்ய விருப்பது ஏற்ற இறக்கமானப் பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் கேது லாப ஸ்தானத்திலிருப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5&இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது.
உடல் நிலை
உடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனக்கவலைகள் மருத்துவ செலவுகள் தோன்றும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல் டென்ஷனும் குறையும்.
குடும்பம் குழந்தை
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு வீண் செலவுகள் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறியிலிருந்து பின்பு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். போட்டிகள் பொறாமைகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். கூட்டாளிகளால் லாபங்கள் உண்டாகும் என்றாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் நிம்மதியளிப்பதாக அமையும். இடமாற்றங்களும் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்படுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற சற்று போராட வேண்டியிருந்தாலும் கிடைக்க வேண்டிய ஆதரவுகள் கிடைக்கும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைப்பதால் பொருளாதாரம் மேம்படும். அதி நவீன கருவிகளை வாங்க முடியும்.
கலைஞர்களுக்கு
வாய்ப்புகள் நிறைய கிடைக்கப் பெற்றிருந்தாலும், எதிர் பார்த்து காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வர வேண்டிய பணத் தொகைகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவ மாணவியர்களுக்கு
கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் படிப்படியான முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர் பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
ராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை
சர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். ராகு 5இல் இருப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் கவலைகள் ஏற்படும் என்றாலும் கேது 11இல் இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான்&ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களிலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. இது வரை 6&இல் சஞ்சரித்து அனுகூலப்பலன்களை வாரி வழங்கிய சனி பகவான் 17.12.2014 முதல் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு கண்ட சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடக்கவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.
ராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை
ராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடமே ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும். கடன்கள் குறையும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும், கேது பகவான் 11லும் சஞ்சாரம் செய்கின்றனர். இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள். பொன் பொருள் சேரும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.
ராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை
ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும் கேது பகவான் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.
கிருத்திகை 2,3,4&ம் பாதங்கள்
மென்மையான குணமும், வெளிப்படையாக பேசும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் காரியங்களில் சிறு சிறு தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
ரோகிணி
அனைத்து கலைகளையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சற்று தாமதத்துடன் வரன் அமையும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும்.
மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
திடமான நம்பிக்கையும் யாருக்கு பயப்படாத குணமும் கொண்ட உங்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுகள் இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் சற்று குறையும். எதிர் பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது.
திர்ஷ்டம் அளிப்பை
எண் 5,6,8,14,15,17
நிறம் வெண்மை,நீலம்
கிழமை வெள்ளி, சனி
கல் வைரம்
திசை தென்கிழக்கு
தெய்வம் விஷ்ணு, லகூஷ்மி
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும். 16.12.2014 முதல் சனி 7இல் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்யவும். ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person who is will to sent money by western union money transfer or by money gram details are as follows as
R.Balamurugan,
S/O Murugu Rajendran,
No 33 Palani andavar koil street,
Vadapalani Chennai -600026,
South India. Cell 9841771188/7200163001
No comments:
Post a Comment