குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 &ம் பாதங்கள்
அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய அழகும், கட்டான உடலும் கொண்ட துலா ராசி அன்பர்களே! ஆண்டுக் கோளான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10இல் வரும் 13.06.2014 முதல் 05.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறு முடியாது. எனவே தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014 முதல் கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். உங்களுக்கு ஏழரை சனியில் 16.12.2014 முடிய ஜென்ம சனியும் அதன் பின் பாத சனியும் நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமான செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொது நலக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுறு சுறுப்பாக இருக்கும். அவ்வப்போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்து செலவுகளுக்குப் பின் குணமாகும். எந்தவொரு காரியத்திலும் அதிக உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
குடும்பம் பொருளாதார நிலை
பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறும். சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று சாதகமான நிலைகள் உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
தொழில் வியாபாரிகளுக்கு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப் போகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அரசு வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். தொழிலிலும் மந்த நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமுடனிருப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் காலம் என்பதால் தங்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பழச் சொற்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளை கண்முன்னேயே பிறர் தட்டிச் செல்வர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தாமதமாக கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப் பெற அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. பெயர் புகழுக்கு இழுக்கு நேராதபடி பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் நன்றாக அமைய கடும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காத சூழ்நிலையால் பயிர் வேலைகள் சரி வர நடக்காது போகும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய மானிய உதவிகள் தாமதப்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.
படிப்பு
கல்வியில் ஒரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புக்களை தவிர்ப்பது நல்லது.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது எச்சிரிக்கையுடனிருப்பது நல்லது.
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை
குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் நன்மைத் தீமை கலந்த பலன்களே உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலத்தை பெறுவீர்கள். 21.06.2014 முதல் கேது 6&ல் சஞ்சரிப்பதால் வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாவதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகும். சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற மடைவார்கள்.
குரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை
குரு பகவான் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். சனி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகன் என்பதால் குரு சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஒரளவுக்கு எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைந்து விட முடியும். சிலருக்கு பழைய கார், பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் கிட்டும். உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் சிறந்த அனுகூலத்தை அடைய முடியும். போட்டிகள் சற்றே குறையும். கேது 6&இல் சஞ்சரிப்பதால் எந்த வித வம்பு வழக்குகளையும் எதிர் கொண்டு வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்தரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை
குரு பகவான் உங்கள் ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களும் ஒரளவுக்கு அனுகூலமளிப்பதாகவே அமையும். குரு 10இல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவது நல்லது. புதன் பாக்கிய விரய ஸ்தானாதிபதி என்பதால் அவர் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிப்பதால் வர வேண்டிய பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுப விரயங்களும் உண்டாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன்கள் படிப்படியாக குறையும்.
குரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை
குரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11&இல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 11&இல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். பிரிந்த உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். 16.12.2014 முதல் ஏழரை சனியில் குடும்ப சனி தொடங்கயுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவது நல்லது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் அமையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் இது வரை இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். அபிவிருத்தி பெருகுவதால் லாபமும் உயர்வடையும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை ஏற்படுவதுடன் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம் பட செயல் படுவார்கள்.
குரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை
ஜென்ம ராசிக்கு 10இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வக்ரகதியிலிருப்பதால் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். ஏழரை சனியில் குடும்ப சனி 16.12.2014 முதல் தொடங்கியுள்ளதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கேது 6&இல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும்.
குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை
குரு பகவான் பாக்கிய விரய ஸ்தானதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10&இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் வர வேண்டிய பண வரவுகள் தடையின்றி வரும். எதிர்பாராத திடீர் விரயங்களும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு அடைய வேண்டிய லாபத்தினை அடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது. தங்கள் பணிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புக்களைத் தவிர்ப்பது, மூலம் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.
சித்திரை 3,4ம் பாதங்கள்
நல்ல அறிவு கூர்மையும், நடைமுறைக்கேற்றவாறு வாழும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.
சுவாதி
அனைவரையும் தன் வசம் இழத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது. இதனால் உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
விசாகம் 1,2,3ம் பாதங்கள்
நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோக ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் 4,5,6,7,8
நிறம் வெள்ளை, பச்சை,
கிழமை வெள்ளி, புதன்,
திசை தென் கிழக்கு,
கல் ரைவம்
தெய்வம் லட்சுமி
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10&இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீப மேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஏழரை சனி நடைபெறுவதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது.
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of
MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment